22 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் கைதியை விடுதலை செய்யக் கோரி கோவை ஆட்சியரிடம் மனு

கோவை: கோவை மத்திய சிறையில் 22 ஆண்டுகளாக இருக்கும் கைதியை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்தினர் மனு அளித்தனர்.


கோவை: கோவை மத்திய சிறையில் 22 ஆண்டுகளாக இருக்கும் கைதியை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்தினர் மனு அளித்தனர்.

எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவையொட்டி, 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, வயோதிகம் கருணை அடிப்படையில் 67 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், 22 ஆண்டுகளாகக் கோவை மத்திய சிறையில் இருக்கும் தனது தந்தையை விடுதலையை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அவரது மகன் சித்திக், மகள்கள் முபினா, ருக்ஷான ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது :- தமிழக அரசு விடுதலை செய்த 67 கைதிகளில், இஸ்லாமிய கைதிகள் யாரும் விடுதலை செய்யப்படவில்லை. தமிழக உயர்நீதிமன்றம் 6 வார காலத்திற்குள் விடுவிக்க உத்தரவிட்டும், தமிழக அரசு அவர்களை விடுவிக்க எந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை. இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளிடம் முறையிடப்பட்டது. அவர்கள் கூறியதன் பேரில், இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். மனு மீது உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்," என்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...