வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நிலுவை தொகையை வழங்கிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகையை அமைச்சர் எஸ்.பி., வேலுமணி வழங்கினார்.


வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகையை அமைச்சர் எஸ்.பி., வேலுமணி வழங்கினார்.

கோவையை அடுத்த வால்பாறையில் அரசு மற்றும் தனியார் தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இதில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தோட்ட தொழிலாளர்களுக்கான பணிகொடை தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜூனன், பி.ஆர்.ஜி அருண்குமார், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ், வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன் மற்றும் தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசுகையில், "தேயிலை தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 309 என வழங்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 116 பேருக்கு ரூ. 54,36,261 பணிக்கொடை வழங்கப்படுகிறது. மீதம் உள்ளவர்களுக்கு விரைவில் வழங்கப்படும்.

தொழிலாளர்களின் தேவையை நிவர்த்தி செய்யும் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது. அவர்களது தேவைகள் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்," என்றார். பின்னர் தோட்ட தொழிலாளர்களுக்கு நிலுவை தொகைக்கான காசோலையை தேயிலை தோட்டத் தொழிலாளர்களிடம் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...