கோவை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், காவல்துறை கவனமாக செயல்பட வேண்டும் எனக் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கோவை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், காவல்துறை கவனமாக செயல்பட வேண்டும் எனக் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கோவையில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க விமானம் மூலம் கோவை வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- பிரதமர் மோடியின் மக்கள் மருந்தகம் மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதனால், மருத்துவ செலவுகள் குறைந்துள்ளது.
தமிழகத்தை போராட்டக் களமாக வைத்திருக்க வேண்டும் என சிலர் திட்டம் போட்டு, கிராமங்களுக்கு சென்று ரகசியமாக ஆட்களை திரட்டி வருகின்றனர். ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் போன்ற போராட்டங்களை நடத்தி அமைதியை சீர்குலைக்க சதித்திட்டம் நடந்து வருகிறது.
பிரதமர் மோடியை கொலை செய்ய மாவோயிஸ்டுகள் போட்ட திட்டம் அதிர்ச்சி அளிக்கிறது. அரசியலில் எதிர்க்கட்சிகளை எதிரி கட்சிகளாக பார்க்கக்கூடாது. நீட் தேர்வை பொருத்தவரை அதிக மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மொத்தம் 4,000 மருத்துவ சீட்டுகள் தான் உள்ளது. இதில், சேர மாணவர்கள் எப்படி முன்னேறி வருகிறார்கள் என்பது தான் முக்கியம். பல ஏழை மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதனை முன்னிலைப்படுத்தாமல் தோல்விகளை மட்டுமே பெரிதுபடுத்துவது வேதனை அளிக்கிறது.
குருவை சாகுபடிக்கு தமிழக அரசு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும். விவசாயத்தை மேம்படுத்தும் பணிகளை தமிழக அரசு செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் விவகாரத்தில் மத்திய அரசு தன் கடமையை செய்யும். சுற்றுச்சூழல் தொடர்பான விஷயங்களில் தமிழக அரசுதான் முன்னெடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது. தொடர்ச்சியாகப் பெருநகரங்களில் சங்கிலி பறிப்பு தொடர்கதையாக உள்ளது. கவலை அளிக்கிறது. சட்டம், ஒழுங்கு பிரச்சினையில் காவல்துறை கவனம் செலுத்த வேண்டும், என்றார்.
இதனிடையே, பா.ஜ.க., பிரமுகர் எஸ்.வி. சேகரை இன்னமும் தமிழக காவல்துறையால் கைது செய்ய முடியவில்லையே என்ற கேள்வியை செய்தியாளர்கள் தமிழிசை சவுந்தரராஜனிடம் எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், "பெண்களை இழிவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது. எஸ்.வி., சேகரை கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளோம். சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்," என்றார்.
கோவையில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க விமானம் மூலம் கோவை வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- பிரதமர் மோடியின் மக்கள் மருந்தகம் மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதனால், மருத்துவ செலவுகள் குறைந்துள்ளது.
தமிழகத்தை போராட்டக் களமாக வைத்திருக்க வேண்டும் என சிலர் திட்டம் போட்டு, கிராமங்களுக்கு சென்று ரகசியமாக ஆட்களை திரட்டி வருகின்றனர். ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் போன்ற போராட்டங்களை நடத்தி அமைதியை சீர்குலைக்க சதித்திட்டம் நடந்து வருகிறது.
பிரதமர் மோடியை கொலை செய்ய மாவோயிஸ்டுகள் போட்ட திட்டம் அதிர்ச்சி அளிக்கிறது. அரசியலில் எதிர்க்கட்சிகளை எதிரி கட்சிகளாக பார்க்கக்கூடாது. நீட் தேர்வை பொருத்தவரை அதிக மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மொத்தம் 4,000 மருத்துவ சீட்டுகள் தான் உள்ளது. இதில், சேர மாணவர்கள் எப்படி முன்னேறி வருகிறார்கள் என்பது தான் முக்கியம். பல ஏழை மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதனை முன்னிலைப்படுத்தாமல் தோல்விகளை மட்டுமே பெரிதுபடுத்துவது வேதனை அளிக்கிறது.
குருவை சாகுபடிக்கு தமிழக அரசு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும். விவசாயத்தை மேம்படுத்தும் பணிகளை தமிழக அரசு செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் விவகாரத்தில் மத்திய அரசு தன் கடமையை செய்யும். சுற்றுச்சூழல் தொடர்பான விஷயங்களில் தமிழக அரசுதான் முன்னெடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது. தொடர்ச்சியாகப் பெருநகரங்களில் சங்கிலி பறிப்பு தொடர்கதையாக உள்ளது. கவலை அளிக்கிறது. சட்டம், ஒழுங்கு பிரச்சினையில் காவல்துறை கவனம் செலுத்த வேண்டும், என்றார்.
இதனிடையே, பா.ஜ.க., பிரமுகர் எஸ்.வி. சேகரை இன்னமும் தமிழக காவல்துறையால் கைது செய்ய முடியவில்லையே என்ற கேள்வியை செய்தியாளர்கள் தமிழிசை சவுந்தரராஜனிடம் எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், "பெண்களை இழிவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது. எஸ்.வி., சேகரை கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளோம். சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்," என்றார்.