நீலகிரி: நீலகிரியில் உலக புகழ் பெற்ற உதகமண்டல அரசு தாவரவியல் பூங்காவை ஏற்படுத்தித் தந்த இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த வில்லியம் கிரகம் மெக் ஐவரின் 142-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
நீலகிரி: நீலகிரியில் உலக புகழ் பெற்ற உதகமண்டல அரசு தாவரவியல் பூங்காவை ஏற்படுத்தித் தந்த இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த வில்லியம் கிரகம் மெக் ஐவரின் 142-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
அவரது கல்லரை புனித ஸ்டீபன் பேராலய வளாகத்தில் அமைந்துள்ளது. அந்த கல்லறையில் தாவரவியல் பூங்காவைச் சார்ந்த ஊழியர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இங்கிலாந்து நாட்டின் ராயல் பொட்டானிக்கல் கார்டனில் பயிற்சியாளராக இருந்த மெக் ஐவர் கடந்த 1847-ம் ஆண்டு உதகமண்டலம் வந்து 22 ஏக்கரில் தாவரவியல் பூங்காவை ஏற்படுத்தினார்.

இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பல்வேறு தாவரங்கள், 150-க்கும் மேற்பட்ட அரிய வகை மரங்கள் குளிர் மற்றும் மித தட்ப வெப்ப நிலையிலுள்ள பல்வேறு புதர்கள் அந்த பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், பல தரப்பட்ட பூக்களை பல்வேறு நாடுகளிலிருந்து கொண்டு வந்து இங்கு அறிமுகப்படுத்தியவர் மெக் ஐவர்.
நீலகிரியின் இன்றைய வேளாண் வளர்ச்சிக்கு வித்திட்டவர் மெக் ஐவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது கல்லரை புனித ஸ்டீபன் பேராலய வளாகத்தில் அமைந்துள்ளது. அந்த கல்லறையில் தாவரவியல் பூங்காவைச் சார்ந்த ஊழியர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இங்கிலாந்து நாட்டின் ராயல் பொட்டானிக்கல் கார்டனில் பயிற்சியாளராக இருந்த மெக் ஐவர் கடந்த 1847-ம் ஆண்டு உதகமண்டலம் வந்து 22 ஏக்கரில் தாவரவியல் பூங்காவை ஏற்படுத்தினார்.

இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பல்வேறு தாவரங்கள், 150-க்கும் மேற்பட்ட அரிய வகை மரங்கள் குளிர் மற்றும் மித தட்ப வெப்ப நிலையிலுள்ள பல்வேறு புதர்கள் அந்த பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், பல தரப்பட்ட பூக்களை பல்வேறு நாடுகளிலிருந்து கொண்டு வந்து இங்கு அறிமுகப்படுத்தியவர் மெக் ஐவர்.
நீலகிரியின் இன்றைய வேளாண் வளர்ச்சிக்கு வித்திட்டவர் மெக் ஐவர் என்பது குறிப்பிடத்தக்கது.