கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளிலும் மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்து, மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 36 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளிலும் மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்து, மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 36 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கோவையிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. பருவமழை தீவிரமடையும் பட்சத்தில் நகரின் நீர்நிலைகள், பெரும்பாலான சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, அதிக மழைப்பொழிவின் போது மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகராட்சி சார்பில் இளநிலை பொறியாளர்கள் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், பொறியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் அடங்கிய தலா 10 பேர் கொண்ட 36 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
'இந்தக் குழுவினர் அனைத்து மண்டல பகுதிகளிலும் ஆய்வு செய்து, மழைக் காலத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கைகளை மேற்கொள்வர்' என மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கோவையிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. பருவமழை தீவிரமடையும் பட்சத்தில் நகரின் நீர்நிலைகள், பெரும்பாலான சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, அதிக மழைப்பொழிவின் போது மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகராட்சி சார்பில் இளநிலை பொறியாளர்கள் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், பொறியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் அடங்கிய தலா 10 பேர் கொண்ட 36 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
'இந்தக் குழுவினர் அனைத்து மண்டல பகுதிகளிலும் ஆய்வு செய்து, மழைக் காலத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கைகளை மேற்கொள்வர்' என மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.