மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே அமைய உள்ள ரசாயன தொழிற்சாலைக்கு தடை விதிக்கக் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே அமைய உள்ள ரசாயன தொழிற்சாலைக்கு தடை விதிக்கக் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காரமடை ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளியங்காடு ஊராட்சி, கரியன்குட்டை என்னுமிடத்தில் வாசனை திரவியம் தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலை நிறுவப்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலையில் ஹெக்சேன், அசிட்டோன், ஆல்கஹால், மெத்தனால், காஸ்மிக் அமிலம், போன்ற வேதிப்பொருட்களைப் பயன்படுத்துவதால் இப்பகுதி சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, இத்தொழிற்சாலைக்கு அருகே அமைந்துள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள பில்லூர் ஆணை நீர் ஆலையின் ரசாயன கழிவுநீரால் மாசடையும் என்ற புகார் எழுந்துள்ளது.
மேலும் தொழிற்சாலையை சுற்றியுள்ள நஞ்சனூர், வெள்ளியங்காடு, முத்துக்கல்லூர், கண்டியூர் உள்ளிட்ட முப்பதிற்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் பாழாகி விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும் எனக்கூறும் இப்பகுதி விவசாயிகள் இத்தொழிற்சாலை வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் இயற்கை சூழலும் வனவிலங்குகளும் பாதிக்கப்படும் என்கின்றனர்.
பாதிப்புக்களைத் தடுக்க இந்த ரசாயன தொழிற்சாலைக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கையினை முன்வைத்து இன்று இரு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் இல்லாத காரணத்தினால் அலுவலக வாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கை மனுவை மாவட்ட நிர்வாக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
காரமடை ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளியங்காடு ஊராட்சி, கரியன்குட்டை என்னுமிடத்தில் வாசனை திரவியம் தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலை நிறுவப்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலையில் ஹெக்சேன், அசிட்டோன், ஆல்கஹால், மெத்தனால், காஸ்மிக் அமிலம், போன்ற வேதிப்பொருட்களைப் பயன்படுத்துவதால் இப்பகுதி சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, இத்தொழிற்சாலைக்கு அருகே அமைந்துள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள பில்லூர் ஆணை நீர் ஆலையின் ரசாயன கழிவுநீரால் மாசடையும் என்ற புகார் எழுந்துள்ளது.
மேலும் தொழிற்சாலையை சுற்றியுள்ள நஞ்சனூர், வெள்ளியங்காடு, முத்துக்கல்லூர், கண்டியூர் உள்ளிட்ட முப்பதிற்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் பாழாகி விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும் எனக்கூறும் இப்பகுதி விவசாயிகள் இத்தொழிற்சாலை வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் இயற்கை சூழலும் வனவிலங்குகளும் பாதிக்கப்படும் என்கின்றனர்.
பாதிப்புக்களைத் தடுக்க இந்த ரசாயன தொழிற்சாலைக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கையினை முன்வைத்து இன்று இரு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் இல்லாத காரணத்தினால் அலுவலக வாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கை மனுவை மாவட்ட நிர்வாக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.