கோவை: கோவையில் அடுத்த 3 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையில் அடுத்த 3 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "கோவை, நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பரவலான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கோவையை பொறுத்தவரை அடுத்த மூன்று நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரம் வெப்ப நிலையை பொறுத்தவரையில் 32 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை அதிகபட்சம் பதிவாகக்கூடும். இரவு நேரத்தில் 23 முதல் 24 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது.
அதே நேரம் காற்றின் வேகம் 8 கிலோ மீட்டர் முதல் 10 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும். தென்மேற்கு பருவ மழை எதிர்பார்த்த படி பெய்யத் தொடங்கிவிட்டது. மேலும், தீவிரம் அடைந்தால் நன்றாக இருக்கும்." என்றார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "கோவை, நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பரவலான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கோவையை பொறுத்தவரை அடுத்த மூன்று நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரம் வெப்ப நிலையை பொறுத்தவரையில் 32 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை அதிகபட்சம் பதிவாகக்கூடும். இரவு நேரத்தில் 23 முதல் 24 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது.
அதே நேரம் காற்றின் வேகம் 8 கிலோ மீட்டர் முதல் 10 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும். தென்மேற்கு பருவ மழை எதிர்பார்த்த படி பெய்யத் தொடங்கிவிட்டது. மேலும், தீவிரம் அடைந்தால் நன்றாக இருக்கும்." என்றார்.