நீட் விவகாரம்: கோவையில் ரயில் மறியல் போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்கத்தினர் கைது

கோவை: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோவையில் ரயில் மறியல் போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோவையில் ரயில் மறியல் போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.

மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய கோரியும் நீட் தேர்வால் மாணவர்களை தற்கொலைக்கு தள்ளும் மத்திய அரசைக் கண்டித்தும் இந்திய மாணவர் சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்தவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பியடி ரயில் நிலையத்தின் உள்ளே நுழைய முயன்றனர். அப்போது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் நுழைவாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், மாணவிகளின் மரணத்திற்கு நீதி வேண்டியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து, முற்றுகையில் ஈடுபட முயன்ற 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.


Video: Laxman

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...