கோவை: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோவையில் ரயில் மறியல் போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோவையில் ரயில் மறியல் போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.
மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய கோரியும் நீட் தேர்வால் மாணவர்களை தற்கொலைக்கு தள்ளும் மத்திய அரசைக் கண்டித்தும் இந்திய மாணவர் சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்தவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பியடி ரயில் நிலையத்தின் உள்ளே நுழைய முயன்றனர். அப்போது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் நுழைவாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், மாணவிகளின் மரணத்திற்கு நீதி வேண்டியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து, முற்றுகையில் ஈடுபட முயன்ற 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
Video: Laxman