வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் பணம் திருடப்பட்ட விவகாரம் : சைபர் கிரைம் போலீசார் விசாரணை

கோவை: சிங்காநல்லூர் அருகே உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: சிங்காநல்லூர் அருகே உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரின் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி கணக்கில் இருந்து இன்று அதிகாலை ரூ. 40 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாலமுருகன், சம்பந்தப்பட்ட வங்கி மற்றும் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அப்போது, இதேபோல, ஏராளமானோர் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டதாக மாநகர காவல்துறை குற்றப்பிரிவு துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஏ.டி.எம்.மில் கடந்த 2-ம் தேதி பணம் எடுத்தவர்கள் என்பது தெரியவந்தது. 

இதையடுத்து, போலீசார் சம்பந்தப்பட்ட ஏ.டி.எம்.மில் இருந்த சி.சி.டி.வி., காட்சிகளை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், சைபர் கிரைம் போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில், சம்பந்தப்பட்ட ஏ.டி.எம்.மையும் வங்கி நிர்வாகத்தினர் மூடினர். தொடர்ந்து, 10-க்கும் மேற்பட்டவர்கள் வங்கி கணக்கில் இருந்து ரூ. 40,000 முதல் ரூ. 4 லட்சம் வரையில் பெங்களூர், கோவை ஆகிய இடங்களில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாகப் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். 

கடந்த சில நாட்களாக ஸ்கிம்மர் கருவியைக் கொண்டு ஏ.டி.எம்.மில் இருந்து பணம் மோசடி செய்யும் நிகழ்வுகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த சம்பவமும் அதேபோல் நடந்துள்ளதா என்ற கோணத்தில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...