நீலகிரி: உதகையை அடுத்துள்ள மொரக்குட்டி - எப்பநாடு சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி: உதகையை அடுத்துள்ள மொரக்குட்டி - எப்பநாடு சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மொரக்குட்டி-எப்பநாடு பகுதியை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இவ்வழித்தடத்தில் அரசு பேருந்து உள்ளிட்ட தனியார் வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன.
இந்நிலையில், மொரக்குட்டி கிராமத்திலிருந்து எப்பநாடு கிராமம் வரை சாலை பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. பிரதான சாலையில் உள்ள வளைவில், 20 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டிருப்பதை அங்கு வேலை செய்தவர்கள் பார்த்துள்ளனர்.

பின், கிராம மக்கள் சிலர் கயிறு கட்டி பள்ளத்தில் இறங்கி ஆய்வு செய்த போது, சுரங்கம் போல் தெரிந்ததால் அச்சத்துடன் வெளியேறினர். சாலையோரத்தில் ஏற்பட்டுள்ள திடீர் சுரங்க பள்ளத்தால் மக்களிடையே ஏற்பட்ட பீதியால், அவ்வழித்தடத்தில் அரசு பேருந்துகள், தனியார் வாகனங்களின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.
மொரக்குட்டி-எப்பநாடு பகுதியை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இவ்வழித்தடத்தில் அரசு பேருந்து உள்ளிட்ட தனியார் வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன.
இந்நிலையில், மொரக்குட்டி கிராமத்திலிருந்து எப்பநாடு கிராமம் வரை சாலை பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. பிரதான சாலையில் உள்ள வளைவில், 20 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டிருப்பதை அங்கு வேலை செய்தவர்கள் பார்த்துள்ளனர்.

பின், கிராம மக்கள் சிலர் கயிறு கட்டி பள்ளத்தில் இறங்கி ஆய்வு செய்த போது, சுரங்கம் போல் தெரிந்ததால் அச்சத்துடன் வெளியேறினர். சாலையோரத்தில் ஏற்பட்டுள்ள திடீர் சுரங்க பள்ளத்தால் மக்களிடையே ஏற்பட்ட பீதியால், அவ்வழித்தடத்தில் அரசு பேருந்துகள், தனியார் வாகனங்களின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.