கோவை: குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி ராஜா அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வடிவங்களில் சிற்பங்கள் செய்வது வழக்கம்.
கோவை: குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி ராஜா அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வடிவங்களில் சிற்பங்கள் செய்வது வழக்கம்.
பொங்கலின் போது ஜல்லிக்கட்டு விளையாட்டு வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில், மைக்ரோ அளவில் தங்கத்தின் மூலம் காளைகளை வடிவமைத்திருந்தார்.
சிறிய அளவிலான உலக கோப்பை, எம்.ஜி.ஆர்., நூற்றாண்டை முன்னிட்டு அவரது உருவம் மற்றும் கருணாநிதி உருவம், மேலும், மூன்று பென்சில்களின் முனையில் தேவாலயத்தின் மீது இயேசு இருப்பதைப் போல் சிற்பம் போன்றவற்றை வடிவமைத்திருந்தார்.
தற்போது மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரை கிலோ தேன் மெழுகு கொண்டு விநாயகர் சிலையை வடிவமைத்து விநாயகர் மரத்திற்கு தண்ணீர் ஊற்றுவது போல வடிவமைத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "பொதுமக்களிடையே மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தியும், மரம் நடவேண்டியதின் அவசியத்தையும் உணர்த்தும் வகையில் அதை வடிவமைத்தேன். இதை செய்ய ஒரு நாள் ஆனது. இதனை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க உள்ளேன். மரம் நடுவோம் மழை பெறுவோம் என்பதே இதனை உருவாக்கியதின் நோக்கம்." என்றார்.
பொங்கலின் போது ஜல்லிக்கட்டு விளையாட்டு வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில், மைக்ரோ அளவில் தங்கத்தின் மூலம் காளைகளை வடிவமைத்திருந்தார்.
சிறிய அளவிலான உலக கோப்பை, எம்.ஜி.ஆர்., நூற்றாண்டை முன்னிட்டு அவரது உருவம் மற்றும் கருணாநிதி உருவம், மேலும், மூன்று பென்சில்களின் முனையில் தேவாலயத்தின் மீது இயேசு இருப்பதைப் போல் சிற்பம் போன்றவற்றை வடிவமைத்திருந்தார்.
தற்போது மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரை கிலோ தேன் மெழுகு கொண்டு விநாயகர் சிலையை வடிவமைத்து விநாயகர் மரத்திற்கு தண்ணீர் ஊற்றுவது போல வடிவமைத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "பொதுமக்களிடையே மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தியும், மரம் நடவேண்டியதின் அவசியத்தையும் உணர்த்தும் வகையில் அதை வடிவமைத்தேன். இதை செய்ய ஒரு நாள் ஆனது. இதனை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க உள்ளேன். மரம் நடுவோம் மழை பெறுவோம் என்பதே இதனை உருவாக்கியதின் நோக்கம்." என்றார்.