தூத்துக்குடி: துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடி: துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ம் தேதி பேரணி நடந்தது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதற்கு தமிழக அரசியல் தலைவர்களும் பல்வேறு நல அமைப்புகளும் தங்களது எதிர்ப்பையும் ஆழ்ந்த இரங்கலையும் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு தூத்துக்குடி சென்ற நடிகர் விஜய், மினி சகாயபுரத்தில் உள்ள ஸ்னோலின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்தார். அவர்களுக்கு ஆறுதல் கூறிய விஜய் ஒரு லட்ச ரூபாய் நிதி வழங்கினார்.

அதே போன்று திரேஸ்புரத்தில் உள்ள ஜான்சியின் வீட்டிற்கும், சாயர்புரம் பேய்க்குளத்தில் உள்ள செல்வகுமாரின் வீட்டிற்கும் சென்று அவர்களது குடும்பத்தினரை சந்தித்துப் பேசியதோடு நிதி உதவியும் செய்தார்.

பின்னர், தனியார் விடுதியில் தங்கிய அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை இன்று சந்திப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ம் தேதி பேரணி நடந்தது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதற்கு தமிழக அரசியல் தலைவர்களும் பல்வேறு நல அமைப்புகளும் தங்களது எதிர்ப்பையும் ஆழ்ந்த இரங்கலையும் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு தூத்துக்குடி சென்ற நடிகர் விஜய், மினி சகாயபுரத்தில் உள்ள ஸ்னோலின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்தார். அவர்களுக்கு ஆறுதல் கூறிய விஜய் ஒரு லட்ச ரூபாய் நிதி வழங்கினார்.

அதே போன்று திரேஸ்புரத்தில் உள்ள ஜான்சியின் வீட்டிற்கும், சாயர்புரம் பேய்க்குளத்தில் உள்ள செல்வகுமாரின் வீட்டிற்கும் சென்று அவர்களது குடும்பத்தினரை சந்தித்துப் பேசியதோடு நிதி உதவியும் செய்தார்.

பின்னர், தனியார் விடுதியில் தங்கிய அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை இன்று சந்திப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.