காரமடை பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடிக்கக் கூண்டு வைத்த வனத்துறையினர்

கோவை : காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார வனப்பகுதிக்குள் நடமாடி வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளன

கோவை : காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார வனப்பகுதிக்குள் நடமாடி வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். 

கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையம், சிறுமுகை மற்றும் காரமடை பகுதிகளில் அண்மைக் காலமாக வனவிலங்குகளின் ஊடுருவல் அதிகரித்து வருகிறது. காட்டுயானை கூட்டங்கள் இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து விவசாயப் பயிர்களை நாசப்படுத்தி வரும் நிலையில், கடந்த இரு மாதங்களாக சிறுத்தைகளும் வனத்தை விட்டு வெளியேறி கிராமப்புறங்களில் நடமாடுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. நள்ளிரவு நேரங்களில் நுழையும் சிறுத்தை விவசாய தோட்டங்களில் வளர்க்கப்படும் கன்று குட்டிகள் மற்றும் ஆடுகளை அடித்துக்கொன்று விடுகின்றன.

மேலும் தோட்டக்காவலுக்கு இருக்கும் நாய்கள் மற்றும் தெரு நாய்களையும் கூட கொன்று இழுத்து சென்று விடுகின்றன. மேட்டுப்பாளையம் நகரை அடுத்துள்ள மோத்தேபாளையம் என்னும் கிராமத்தில் கடந்த இரு வாரத்தில் மட்டும் ஒரு கன்றுக்குட்டி மற்றும் மூன்று நாய்களை சிறுத்தை அடித்து கொன்றுள்ளதாக வனத்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. ஊர் மக்களின் புகாரையடுத்து சம்பவ இடத்தில் ஆய்வு நடத்திய வனத்துறை அதிகாரிகள், நாய்கள் கொல்லப்பட்ட விதம் மற்றும் காலடி தடயங்களை வைத்து சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனர்.

இதனையடுத்து மோத்தேபாளையம் கிராமத்தில் உள்ள விவசாய தோட்டத்தில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அருகில் உள்ள மலையடிவாரத்தில் இருந்து சிறுத்தை ஊருக்குள் நுழையும் பகுதியை கணக்கிட்டு அப்பகுதியில் தற்போது கூண்டை வைத்துள்ளனர். கூண்டுக்குள் ஆடு அல்லது நாயை கட்டி வைத்து அதனை தாக்க வரும் சிறுத்தையினை பிடிக்க சிறுமுகை வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். 

இதேபோல, காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட மேடூர், பாறைப்பள்ளம், பனப்பாளையம், வெள்ளியங்காடு கிராமங்களிலும் சிறுத்தைகள் நடமாட்டம் காரணமாக இருபதுக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகியுள்ளதால், இங்கும் இதுபோன்ற கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியினை வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...