கோவை: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மரம் நடுவிழா மற்றும் மிதிவண்டி பேரணி நடைபெற்றது.
கோவை: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மரம் நடுவிழா மற்றும் மிதிவண்டி பேரணி நடைபெற்றது.
உலக சுற்றுச்சூழல் தினம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இன்று (5-6-2018) கொண்டாடப்பட்டது. சுற்றுச்சூழலியல் துறையால் நடத்தப்பட்ட இவ்விழாவில் கல்லூரி ச. மகிமைராஜா, முதன்மையர் (வேளாண்மை) மறைந்த பேராசிரியர் சிவசங்கர் அவர்களின் நினைவாக அரச மரம் நட்டு மரம் நடு விழாவினைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டனர்.
பின்னர் நடைபெற்ற “சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணியை” இயற்கை வள மேலாண்மை இயக்குநரகத்தின் தனி அலுவலர் ஜவஹர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்ற இப்பேரணி பால் கம்பெனி, ஆர்.எஸ்.புரம், கவுலிபிரவுன் ரோடு, மருதமலை சாலை வழியாக பல்கலைக்கழகத்தை வந்தடைந்தது. பேரணியில் பங்கேற்றவர்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதேபோல, பார்க் குளோபல் பள்ளியிலும் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்பட்டது. எனவே, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
உலக சுற்றுச்சூழல் தினம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இன்று (5-6-2018) கொண்டாடப்பட்டது. சுற்றுச்சூழலியல் துறையால் நடத்தப்பட்ட இவ்விழாவில் கல்லூரி ச. மகிமைராஜா, முதன்மையர் (வேளாண்மை) மறைந்த பேராசிரியர் சிவசங்கர் அவர்களின் நினைவாக அரச மரம் நட்டு மரம் நடு விழாவினைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டனர்.
பின்னர் நடைபெற்ற “சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணியை” இயற்கை வள மேலாண்மை இயக்குநரகத்தின் தனி அலுவலர் ஜவஹர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்ற இப்பேரணி பால் கம்பெனி, ஆர்.எஸ்.புரம், கவுலிபிரவுன் ரோடு, மருதமலை சாலை வழியாக பல்கலைக்கழகத்தை வந்தடைந்தது. பேரணியில் பங்கேற்றவர்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதேபோல, பார்க் குளோபல் பள்ளியிலும் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்பட்டது. எனவே, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.