கோவை: ஆதிசேஷன் கமிட்டியை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை: ஆதிசேஷன் கமிட்டியை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் செந்தில்குமார், செயலாளர் குமார், வட்டக்கிளை தலைவர்கள் ராஜகோபால், சிவம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது, மக்கள் நலனைப் பாதிக்கும் ஆதிசேஷன் கமிட்டியை வாபஸ் வாங்க வேண்டும், கோவையில் அரசு ஆணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்தக் கோரிக்கையை அரசு ஏற்க மறுத்தால், போராட்டங்கள் தீவிரம் அடையும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
அரசு நேரடி நியமனங்களை குறைத்து அவுட் சோர்ஸிங் முறையைக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டு வருவதால், வரும் காலங்களில் இளைய சமுதாயத்திற்கு அரசு பணி என்பது கனவாக மாறிவிடும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் செந்தில்குமார், செயலாளர் குமார், வட்டக்கிளை தலைவர்கள் ராஜகோபால், சிவம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது, மக்கள் நலனைப் பாதிக்கும் ஆதிசேஷன் கமிட்டியை வாபஸ் வாங்க வேண்டும், கோவையில் அரசு ஆணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்தக் கோரிக்கையை அரசு ஏற்க மறுத்தால், போராட்டங்கள் தீவிரம் அடையும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
அரசு நேரடி நியமனங்களை குறைத்து அவுட் சோர்ஸிங் முறையைக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டு வருவதால், வரும் காலங்களில் இளைய சமுதாயத்திற்கு அரசு பணி என்பது கனவாக மாறிவிடும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.