கோவை: மாவட்டத்திலுள்ள உணவு வணிகர்கள் கட்டாயமாக உணவுப் பாதுகாப்பு உரிமம் பதிவு பெற வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார்.
கோவை: மாவட்டத்திலுள்ள உணவு வணிகர்கள் கட்டாயமாக உணவுப் பாதுகாப்பு உரிமம் பதிவு பெற வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மாவட்டத்திலுள்ள உணவுப் பொருட்கள் தயாரிப்பவர், விநியோகிஸ்தர்கள், முகவர்கள், மளிகை கடைக்காரர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள், மறுபொட்டலமிடுபவர்கள், சாலையோர நடமாடும் உணவு வணிகர்கள், ஹோட்டல்கள், கேண்டின், பேக்கரி மற்றும் தேநீர் விடுதிகள் உரிமம் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு காலக் கெடு முடிந்து விட்டது.
உரிமம் மற்றும் பதிவு பெறாதவர்கள் மீது உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011 பிரிவு 63-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உரிமம் பதிவு பெற்றவர்கள். அதனை நுகர்வோருக்குத் தெரியும் வண்ணம் காட்சிப்படுத்த வேண்டும்.
உணவு சம்மந்தமான புகார்களை பொதுமக்கள் 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தெரிவிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மாவட்டத்திலுள்ள உணவுப் பொருட்கள் தயாரிப்பவர், விநியோகிஸ்தர்கள், முகவர்கள், மளிகை கடைக்காரர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள், மறுபொட்டலமிடுபவர்கள், சாலையோர நடமாடும் உணவு வணிகர்கள், ஹோட்டல்கள், கேண்டின், பேக்கரி மற்றும் தேநீர் விடுதிகள் உரிமம் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு காலக் கெடு முடிந்து விட்டது.
உரிமம் மற்றும் பதிவு பெறாதவர்கள் மீது உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011 பிரிவு 63-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உரிமம் பதிவு பெற்றவர்கள். அதனை நுகர்வோருக்குத் தெரியும் வண்ணம் காட்சிப்படுத்த வேண்டும்.
உணவு சம்மந்தமான புகார்களை பொதுமக்கள் 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தெரிவிக்கலாம்.