கோவை: கோவை மத்திய சிறையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை மத்திய சிறையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீளமேட்டைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதேபோல, வேறு ஒரு வழக்கில் விஜய் என்பவரும் சிறையில் இருந்து வந்தார். இந்த நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த் தகராறு கைகலப்பாக மாறியது.
அப்போது, விஜய் கற்களைக் கொண்டு தாக்கியதில், கைதி ரமேஷ் படுகாயம் அடைந்தார். இதையறிந்து சிறைக் காவலர்கள், படுகாயமடைந்த ரமேஷை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மத்திய சிறையில் கடந்த சில நாட்களாக கைதிகள் தற்கொலை செய்து வரும் நிலையில், தற்போது, கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.