"உங்கள் பிரச்சனைகளை அரசியல்வாதிகளிடம் கூறுங்கள்": முற்றுகையிட்ட மக்களிடம் நடிகர் விவேக் பதில்

நீலகிரி: நீலகிரியில் அடிப்படை வசதிகள் இல்லாததைக் கண்டித்து முற்றுகையிட்ட பொதுமக்களிடம், உங்களது பிரச்சனைகளை அரசியல்வாதிகளிடம் கூறுங்கள் என நகைச்சுவை பாணியில் பதிலளித்துள்ளார்.

நீலகிரி: நீலகிரியில் அடிப்படை வசதிகள் இல்லாததைக் கண்டித்து முற்றுகையிட்ட பொதுமக்களிடம், உங்களது பிரச்சனைகளை அரசியல்வாதிகளிடம் கூறுங்கள் என நகைச்சுவை பாணியில் பதிலளித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா பல பகுதிகளில் சுத்தம் செய்யும் நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், நகைச்சுவை நடிகர் விவேக் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். முதற்கட்டமாக, உதகையில் உள்ள ஆலய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரம் நடும் விழாவில் பங்கேற்ற அவர், காந்தள் பகுதியில் உள்ள கஸ்தூரி பாய் காலனிக்கு குப்பைகள் சுத்தம் செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்றார்.

அங்கு நிகழ்ச்சியை துவக்கி வைக்க இருந்த நிலையில், அப்பகுதி மக்கள் நடிகர் விவேக்கை முற்றுகையிட்டனர். தங்கள் பகுதியில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் தாங்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருவதாகவும், கழிப்பறை வசதிகள் ஏதும் சரிவர பராமரிப்பது இல்லை என நடிகர் விவேக்கிடம் கோரிக்கை வைத்தனர்.



இதை சற்றும் எதிர்பாராத விவேக், 'தான் எந்த விதமான அரசியல் கட்சியையும் சாராதவன், ஐயா அப்துல்கலாம் பாணியில் சமூக பணிகளை மேற்கொள்பவன், அதனால், உங்கள் பிரச்சனைகளை இங்கு உள்ள அரசியல்வாதிகளிடம் கூறுங்கள்' என நகைச்சுவை பாணியில் பதிலளித்தார். இதைத்தொடர்ந்து, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு, பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.



Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...