நீலகிரி: நீலகிரியில் அடிப்படை வசதிகள் இல்லாததைக் கண்டித்து முற்றுகையிட்ட பொதுமக்களிடம், உங்களது பிரச்சனைகளை அரசியல்வாதிகளிடம் கூறுங்கள் என நகைச்சுவை பாணியில் பதிலளித்துள்ளார்.
நீலகிரி: நீலகிரியில் அடிப்படை வசதிகள் இல்லாததைக் கண்டித்து முற்றுகையிட்ட பொதுமக்களிடம், உங்களது பிரச்சனைகளை அரசியல்வாதிகளிடம் கூறுங்கள் என நகைச்சுவை பாணியில் பதிலளித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா பல பகுதிகளில் சுத்தம் செய்யும் நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், நகைச்சுவை நடிகர் விவேக் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். முதற்கட்டமாக, உதகையில் உள்ள ஆலய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரம் நடும் விழாவில் பங்கேற்ற அவர், காந்தள் பகுதியில் உள்ள கஸ்தூரி பாய் காலனிக்கு குப்பைகள் சுத்தம் செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்றார்.
அங்கு நிகழ்ச்சியை துவக்கி வைக்க இருந்த நிலையில், அப்பகுதி மக்கள் நடிகர் விவேக்கை முற்றுகையிட்டனர். தங்கள் பகுதியில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் தாங்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருவதாகவும், கழிப்பறை வசதிகள் ஏதும் சரிவர பராமரிப்பது இல்லை என நடிகர் விவேக்கிடம் கோரிக்கை வைத்தனர்.

இதை சற்றும் எதிர்பாராத விவேக், 'தான் எந்த விதமான அரசியல் கட்சியையும் சாராதவன், ஐயா அப்துல்கலாம் பாணியில் சமூக பணிகளை மேற்கொள்பவன், அதனால், உங்கள் பிரச்சனைகளை இங்கு உள்ள அரசியல்வாதிகளிடம் கூறுங்கள்' என நகைச்சுவை பாணியில் பதிலளித்தார். இதைத்தொடர்ந்து, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு, பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

நீலகிரி மாவட்டத்தில் உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா பல பகுதிகளில் சுத்தம் செய்யும் நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், நகைச்சுவை நடிகர் விவேக் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். முதற்கட்டமாக, உதகையில் உள்ள ஆலய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரம் நடும் விழாவில் பங்கேற்ற அவர், காந்தள் பகுதியில் உள்ள கஸ்தூரி பாய் காலனிக்கு குப்பைகள் சுத்தம் செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்றார்.
அங்கு நிகழ்ச்சியை துவக்கி வைக்க இருந்த நிலையில், அப்பகுதி மக்கள் நடிகர் விவேக்கை முற்றுகையிட்டனர். தங்கள் பகுதியில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் தாங்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருவதாகவும், கழிப்பறை வசதிகள் ஏதும் சரிவர பராமரிப்பது இல்லை என நடிகர் விவேக்கிடம் கோரிக்கை வைத்தனர்.

இதை சற்றும் எதிர்பாராத விவேக், 'தான் எந்த விதமான அரசியல் கட்சியையும் சாராதவன், ஐயா அப்துல்கலாம் பாணியில் சமூக பணிகளை மேற்கொள்பவன், அதனால், உங்கள் பிரச்சனைகளை இங்கு உள்ள அரசியல்வாதிகளிடம் கூறுங்கள்' என நகைச்சுவை பாணியில் பதிலளித்தார். இதைத்தொடர்ந்து, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு, பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
