கோவை: உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை, சுற்று சூழல் மன்றம் மற்றும் லெட்ஸ் தேங்க் ஃபவுண்டேஷன் சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 297 பள்ளிகளில் 10,000 மரக் கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
கோவை: உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை, சுற்று சூழல் மன்றம் மற்றும் லெட்ஸ் தேங்க் ஃபவுண்டேஷன் சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 297 பள்ளிகளில் 10,000 மரக் கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.புரம் பகுதியில் அமைந்துள்ள தேவாங்கா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன், லெட்ஸ் தேங்க் ஃபவுண்டேஷன் அமைப்பின் தலைவர் பிரதீப் மற்றும் சுற்று சூழல் ஆர்வலர்கள் 14 மரக்கன்றுகளை நட்டுவைத்தனர்.

தொடர்ந்து, லெட்ஸ் தேங்க் அமைப்பினர் பேசுகையில், "மாணவர்கள் மத்தியில் மரம் வளர்ப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக, மரக் கன்றுகள் நடப்பட்டு மாணவர் பொறுப்பில் ஒப்படைக்கப்படுகிறது. ஒவ்வொரு மரக் கன்றையும் பராமரிக்கும் மாணவரின் பெயர், அருகில் பொருத்தப்பட்டுள்ள பெயர் பலகையில் எழுதப்படும்.

இது மரத்தின் மீதான நெருக்கத்தை மாணவர் மத்தியில் அதிகரிக்கும். மேலும், உலக சுற்றுச் சூழல் தினமான இன்று சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் மரம் வளர்ப்புபற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் 297 பள்ளிகளில் நடைபெறுகிறது. காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை இப்பள்ளிகளில் 10,000 மரக்கன்றுகளை மாணவர்கள் நட்டுவைக்கின்றனர்.

இதற்காக கடந்த இரண்டு மாதங்களாக லெட்ஸ் தேங்க அமைப்பைச் சேர்ந்த 38 தன்னார்வலர்கள் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு இந்நிகழ்வை ஒருங்கிணைத்துள்ளனர்." என்றார்.

உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.புரம் பகுதியில் அமைந்துள்ள தேவாங்கா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன், லெட்ஸ் தேங்க் ஃபவுண்டேஷன் அமைப்பின் தலைவர் பிரதீப் மற்றும் சுற்று சூழல் ஆர்வலர்கள் 14 மரக்கன்றுகளை நட்டுவைத்தனர்.

தொடர்ந்து, லெட்ஸ் தேங்க் அமைப்பினர் பேசுகையில், "மாணவர்கள் மத்தியில் மரம் வளர்ப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக, மரக் கன்றுகள் நடப்பட்டு மாணவர் பொறுப்பில் ஒப்படைக்கப்படுகிறது. ஒவ்வொரு மரக் கன்றையும் பராமரிக்கும் மாணவரின் பெயர், அருகில் பொருத்தப்பட்டுள்ள பெயர் பலகையில் எழுதப்படும்.

இது மரத்தின் மீதான நெருக்கத்தை மாணவர் மத்தியில் அதிகரிக்கும். மேலும், உலக சுற்றுச் சூழல் தினமான இன்று சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் மரம் வளர்ப்புபற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் 297 பள்ளிகளில் நடைபெறுகிறது. காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை இப்பள்ளிகளில் 10,000 மரக்கன்றுகளை மாணவர்கள் நட்டுவைக்கின்றனர்.

இதற்காக கடந்த இரண்டு மாதங்களாக லெட்ஸ் தேங்க அமைப்பைச் சேர்ந்த 38 தன்னார்வலர்கள் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு இந்நிகழ்வை ஒருங்கிணைத்துள்ளனர்." என்றார்.