உயர்நிலைப்பள்ளியை இடமாற்றம் செய்வதை பள்ளி மாணவர்கள் தர்ணா

திருப்பூர்: உயர்நிலைப்பள்ளியை இடமாற்றம் செய்வதை எதிர்த்து பள்ளி மாணவ-மாணவிகள் பெற்றோர்களுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போரட்டம்.

திருப்பூர்: உயர்நிலைப்பள்ளியை இடமாற்றம் செய்வதை எதிர்த்து பள்ளி மாணவ-மாணவிகள் பெற்றோர்களுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போரட்டம்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதிக்குட்பட்ட அறிவொளி நகர் பகுதியில் செயல்பட்டு வந்த ஆரம்ப பள்ளி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அறிவொளி நகர் பகுதியில் வசிக்கும் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அங்கு கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், அறிவொளி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியினை தற்போது மாவட்ட நிர்வாகம் 3 கிலோ மீட்டருக்கு அப்பால் மாற்றத் திட்டமிட்டுள்ளது . இதுபோண்று மாற்றும் போது குழந்தைகள் 3 கி.மீ தூரம் செல்ல வேண்டும். அதற்கான பேருந்து வசதி அதிகம் இல்லாததால் குழந்தைகள் சிரமப்படுவதோடு கல்வியும் பாதிக்கும் நிலை ஏற்படுவதால் பள்ளியை இடம் மாற்றக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பெற்றோர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதையடுத்து. அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...