கள்ள நோட்டு விவகாரத்தில் தேடப்பட்டு வந்த குற்றவாளி ஆனைகட்டியில் கைது

கோவை: பிரபல கள்ள நோட்டு கும்பலை சேர்ந்த சுந்தரம் மற்றும் கிதர் முகம்மது-வை பிடிப்பதற்காக 4 தனிப்படை அமைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று கிதர் முகம்மது-வை ஆனைகட்டி பகுதியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

கோவை: பிரபல கள்ள நோட்டு கும்பலை சேர்ந்த சுந்தரம் மற்றும் கிதர் முகம்மது-வை பிடிப்பதற்காக 4 தனிப்படை அமைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று கிதர் முகம்மது-வை ஆனைகட்டி பகுதியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

கோவை, வேலாண்டிபாளையம் மருதக்கோனார் வீதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர், சாய்பாபா காலனியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்ததில், அவரிடம் இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.

அந்த நோட்டுகள் அனைத்தும் கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, ஆனந்திடம் நடத்திய விசாரணையில் தனது நண்பர் சுந்தர் என்பவர் மூலம், வேலாண்டிபாளையத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, கடந்த ஒன்றரை மாதமாக கலர் ஜெராக்ஸ் நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து ரூ. 1 கோடியே 18 லட்சம் மதிப்பிலான, 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தீவிரவாதிகளுடன் தொடர்பா?

இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புள்ள சுந்தர் மற்றும் கிதர் முகமது ஆகியோரைப் பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தக் கூட்டத்துக்கு சுந்தர் தான் தலைவர் என்றும், அவருக்கு கிதர் முகமது பக்கபலமாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இவர்கள் மூவருக்கும், சிறையில் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில், கிதர் முகமது மேல் ஏற்கெனவே பல்வேறு கள்ள நோட்டு வழக்குகள் உள்ளன. இவருக்கு, சில தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும், எனவே அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளை, தீவிரவாதிகளுக்கு சப்ளை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கைது

இந்நிலையில், கிதர் முகம்மது-வை ஆனைக்கட்டி பகுதியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். சுந்தரைத் தேடி தனிப்படை போலீசார் கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு விரைந்துள்ளனர். கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டிருப்பதால் பொதுமக்கள் உஷாராக இருக்குமாறு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...