கோவை: தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கருமண் மூலம் பாதிப்பு ஏற்படுவதால் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மலுமிச்சம்பட்டி பொதுமக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கருமண் மூலம் பாதிப்பு ஏற்படுவதால் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மலுமிச்சம்பட்டி பொதுமக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை அடுத்த மலுமிச்சம்பட்டி ராஜகணபதி நகர், ரேவதி நகர், மற்றும் திருவள்ளுவர் நகர் அமைந்துள்ள பகுதியில் பி.சி அண்டு சன்ஸ் என்ற தனியார் பவுண்டரி செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து கரும்புகையுடன் கலந்து கருப்பு மண் வெளியேறுவதாக கூறப்படுகிறது.

அந்த மண் நச்சுத் தன்மை கொண்டதாக இருப்பதால், சுவாச கோளாறு, தோல் நோய், அரிப்பு உள்ளிட்ட காரணங்களால் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், "இந்த பவுண்டரி குறித்து இதுவரை 11 துறைகளுக்கு மனு அளித்துள்ளோம். கடந்த மாதம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இதனை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மாசு கட்டுப்பாட்டை தவிர்க்க பவுண்டரி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததை உறுதி செய்து விட்டுச் சென்றனர். இதன் பிறகும் அதை சரி செய்யும் முயற்சியில் பவுண்டரி நிர்வாகம் ஈடுபடாமல் தொடர்ந்து இயங்கி வருகிறது.
உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மாசு கட்டுப்பாட்டு கருவி பொருத்திய பின்னர் பவுண்டரியை இயக்க அனுமதிக்க வேண்டும்." என்றனர்.