கோவில்களுக்கு அருகே உள்ள கடைகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழக கோவில்களுக்கு அருகே உள்ள கடைகளை அகற்ற வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை காலக்கெடு விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை: தமிழக கோவில்களுக்கு அருகே உள்ள கடைகளை அகற்ற வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை காலக்கெடு விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக அங்கிருந்த 36 கடைகள் எரிந்து சாம்பலாகின. ஆயிரங்கால் மண்டபத்தின் அருகிலிருந்த கடையில் ஏற்பட்ட மின்கசிவே விபத்திற்கான காரணம் என்று கூறப்பட்டது. 



இது போன்ற விபத்துகள் வேறு எந்தக் கோயிலிலும் ஏற்படக்கூடாது என்று அறநிலையத்துறைக்குச் சொந்தமான 36,000 கடைகளை அகற்ற அரசு உத்தரவிட்டது. இந்து சமய அறநிலையத்துறை இதனை கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. 

இதனையடுத்து, அறநிலையத்துறை சார்பில் தமிழக கோவில்களுக்கு அருகில் இருக்கும் கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டன. மாற்று இடம் வழங்காமல் கடைகளை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. 

இந்நிலையில், கடைகளை அகற்ற மேலும் கால அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பல ஆண்டுகளாக கடைகளை நடத்தி வருபவர்களை உடனடியாக அப்புறப்படுத்துவது கடினம் என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், வரும் ஜனவரி 1-ம் தேதிக்கு முன்னதாக கடைகளை அகற்ற வேண்டும் என தெரிவித்தனர்.

இந்நிலையில், கடை உரிமையாளர்கள் நான்கு வார காலத்திற்குள் விண்ணப்பித்தால் மாற்று இடம் வழங்கவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...