வால்பாறையில் அட்டகாசம் செய்யும் சிறுத்தையைப் பிடிக்க கூண்டு

வால்பாறை: வால்பாறை பகுதியில் மக்களைத் தாக்கி, தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு அமைத்துள்ளனர்.

வால்பாறை: வால்பாறை பகுதியில் மக்களைத் தாக்கி, தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு அமைத்துள்ளனர். 

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள சின்கோனா தேயிலை தோட்டத்தில் கடந்த வாரம் சிறுத்தைப்புலி தாக்கியதில் 11 வயது மாணவி மற்றும் சந்திரமதி என்ற தொழிலாளி படுகாயமடைந்தனர். அவர்களுக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 



இதைத் தொடர்ந்து, இப்பகுதியில் சிறுத்தைப்புலியின் தொடர் தாக்குதலை தடுக்க வலியுறுத்தி நேற்று சின்கோனா தொழிலாளர்கள் வேலையை புறக்கணித்து நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தகவலறிந்து வந்த காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

சிறுத்தையைப் பிடிக்க கூண்டு வைப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, முற்றுகை போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில், இன்று காலை அதே குடியிருப்புக்கு அருகில் ஒரு மாட்டை சிறுத்தை கொன்றுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் அச்சம் ஏற்பட்டது. 



இதனைத் தொடர்ந்து, இன்று சின்கோனா முதல் பிரிவு, பெரியகல்லார் பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் வைக்கப்பட்டது. வால்பாறை காவல் ஆய்வாளர் திருமேனி. மானாம்பள்ளி வனச்சரகர் சேகர் தலைமையிலான குழுவினர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...