திருப்பூர்: திருப்பூரில் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்ட இடமில்லாத காரணத்தால் மாநகராட்சி அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூரில் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்ட இடமில்லாத காரணத்தால் மாநகராட்சி அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
மாநகருக்குட்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் குப்பைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இப்படி குவியும் குப்பைகள் நல்லூர் அருகே உள்ள பாறைக்குழிக்குள் கொட்டப்பட்டு வந்தது. இந்த பாறைக்குழி கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு நிரம்பியது.
இதனையடுத்து கஞ்சம்பாளையம், வெள்ளியங்காடு உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகளைக் கொட்ட இடம் தேர்வு செய்தனர். ஆனால், அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை எங்கு கொட்டுவது? என்று தெரியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
குப்பைகளைக் கொட்ட போதிய இடம் கிடைக்காததால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள குப்பைகள் அள்ளப்படாமலே இருந்து வருகிறது. சாலையோரங்களில் குப்பைகள் தேங்கிய நிலையிலேயே கிடக்கிறது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார சீர்கேடு அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆலோசனை செய்து குப்பை கொட்டுவதற்கான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாநகருக்குட்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் குப்பைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இப்படி குவியும் குப்பைகள் நல்லூர் அருகே உள்ள பாறைக்குழிக்குள் கொட்டப்பட்டு வந்தது. இந்த பாறைக்குழி கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு நிரம்பியது.
இதனையடுத்து கஞ்சம்பாளையம், வெள்ளியங்காடு உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகளைக் கொட்ட இடம் தேர்வு செய்தனர். ஆனால், அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை எங்கு கொட்டுவது? என்று தெரியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
குப்பைகளைக் கொட்ட போதிய இடம் கிடைக்காததால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள குப்பைகள் அள்ளப்படாமலே இருந்து வருகிறது. சாலையோரங்களில் குப்பைகள் தேங்கிய நிலையிலேயே கிடக்கிறது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார சீர்கேடு அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆலோசனை செய்து குப்பை கொட்டுவதற்கான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.