திருப்பூரில் குவியும் குப்பைகள் : சேகரிக்க இடமின்றி திணறும் மாநகராட்சி நிர்வாகம்

திருப்பூர்: திருப்பூரில் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்ட இடமில்லாத காரணத்தால் மாநகராட்சி அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

திருப்பூர்: திருப்பூரில் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்ட இடமில்லாத காரணத்தால் மாநகராட்சி அதிகாரிகள் திணறி வருகின்றனர். 

மாநகருக்குட்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் குப்பைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இப்படி குவியும் குப்பைகள் நல்லூர் அருகே உள்ள பாறைக்குழிக்குள் கொட்டப்பட்டு வந்தது. இந்த பாறைக்குழி கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு நிரம்பியது. 

இதனையடுத்து கஞ்சம்பாளையம், வெள்ளியங்காடு உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகளைக் கொட்ட இடம் தேர்வு செய்தனர். ஆனால், அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை எங்கு கொட்டுவது? என்று தெரியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

குப்பைகளைக் கொட்ட போதிய இடம் கிடைக்காததால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள குப்பைகள் அள்ளப்படாமலே இருந்து வருகிறது. சாலையோரங்களில் குப்பைகள் தேங்கிய நிலையிலேயே கிடக்கிறது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார சீர்கேடு அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆலோசனை செய்து குப்பை கொட்டுவதற்கான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...