மேட்டுப்பாளையத்தில் நாட்டு வெடிகுண்டில் சிக்கி வாயில்லா ஜீவன்கள் பலியாகும் பரிதாபம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் வேட்டைக்காரர்கள் வைக்கும் நாட்டு வெடிகுண்டில் சிக்கி வாயில்லா ஜீவன்கள் பலியாவதை தடுக்க வனத்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் வேட்டைக்காரர்கள் வைக்கும் நாட்டு வெடிகுண்டில் சிக்கி வாயில்லா ஜீவன்கள் பலியாவதை தடுக்க வனத்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள இலுப்பநத்தம் என்னும் கிராமத்தில் இன்று காலை மேய்ச்சலுக்கு சென்ற நடராஜன் என்பவருக்குச் சொந்தமான பசுமாடு ஒன்று வேட்டைக்காரர்கள் வைத்த நாட்டு வெடிகுண்டில் சிக்கி அதன் தாடைப்பகுதி முழுவதும் சிதறி உயிரிழந்தது.



இது குறித்து, நடராஜன் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். மூன்று மாத சினையுடன் உள்ள பசுமாடு கொடுமையான முறையில் இறந்துள்ளது என வேதனை தெரிவிக்கும் இப்பகுதி விவசாயிகள், "வனத்தையொட்டியுள்ள பகுதிகளில் காட்டுப்பன்றியை வேட்டையாடும் கும்பல் இது போன்ற ஆபத்தான வெடிகுண்டுகளை மறைத்து வைக்கின்றனர். இதனை மனிதர்கள் அறியாமல் மிதித்தாலும் வெடித்து கால்களை இழக்க நேரிடும்." என்றனர்.

இதே போன்று மற்றொரு அதிர்ச்சியாக இன்று கோவையில் உள்ள நரசீபுரம் பகுதியில் பன்றிக்கு வைத்த நாட்டு வெடிகுண்டில் சிக்கி ஒன்றரை வயது குட்டி காட்டு யானையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த தகவல் பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

வெடிகுண்டு

இது குறித்து வன உயிரின ஆர்வலர்கள் கூறுகையில், "சற்று அழுத்தம் கொடுத்தாலும் பயங்கரமாக வெடித்து சிதறும் வகையில் இந்த நாட்டு வெடிகுண்டு தயாரிக்கப்படுகிறது." வெடி மருந்தை உருட்டி அதனை சுற்றி சிறு சிறு வெங்கிக்சான் கற்கள் என்னும் வெள்ளை நிற கற்களை போட்டு அதன் மீது மக்கா சோளமாவு அல்லது கோழி குடல், மாட்டு இறைச்சியின் கொழுப்பு போன்றவற்றை சுற்றி இந்த வெடிகுண்டு தயாரிக்கப்படுகிறது.

இதன் வாசத்தின் காரணமாக காட்டுப்பன்றி இதனை கடித்தால் உடனடியாக தலை சிதறி இறந்து விடும். அவுட்டுக்காய் என்றழைக்கப்படும் இந்த நாட்டு வெடியில் சிக்கி கடந்த ஓராண்டில் மட்டும் நான்கு காட்டு யானைகள் பலத்த காயமடைந்து ஓரிரு தினங்களில் இறந்து போன சம்பவகங்ளும் நடந்துள்ளன.

கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட சிறுமுகை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக பகுதிகளில் இந்த வேட்டை கும்பல் அதிகளவில் நடமாடி வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட யானை, மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் பலத்த காயத்தோடு அடர்ந்த காட்டுக்குள் ஓடி உணவு உண்ண இயலாமல் இறப்பது கணக்கிலேயே வருவதில்லை.

என்றாவது ஒருநாள் மட்டும் வேட்டையில் ஈடுபடுவோரை பிடித்து வழக்கு போடுவது என்பதோடு இல்லாமல், தீவிர விசாரணை நடத்தி இது போன்ற வேட்டைக் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...