சென்னை: மு.க.ஸ்டாலின் நடத்திய போட்டி சட்டசபையில் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகிய மூவர் கலந்து கொண்டதை கண்டித்து 'நமது அம்மா' பத்திரிகையில் அவர்களை 'கிண்டல் செய்யும் விதமாக செய்தி வெளியாகியுள்ளது.
சென்னை: மு.க.ஸ்டாலின் நடத்திய போட்டி சட்டசபையில் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகிய மூவர் கலந்து கொண்டதை கண்டித்து 'நமது அம்மா' பத்திரிகையில் அவர்களை 'கிண்டல் செய்யும் விதமாக செய்தி வெளியாகியுள்ளது.
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகும் வரை சட்டசபை கூட்டத்தொடரில் கலந்து கொள்ள மாட்டேன் என்று ஸ்டாலின் கூறியிருந்தார். இதையடுத்து அவர் அண்ணா அறிவாலயத்தில் போட்டி சட்டசபையைக் கூட்டினார். இதில் அ.தி.மு.க.,வுக்கு எதிராக கட்சியின் சட்டசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரியும் அடக்கம்.

இவர்கள் மூவரையும் விமர்சனம் செய்து நமது அம்மாவில் தலையங்கம் வெளியாகியுள்ளது. அதில், இரட்டை இலை சின்னத்தாலும் ஈகைக்கும், வாகைக்கும் இலக்கணம் வகுத்த அ.தி.மு.க., தொண்டர்களின் இமைதுஞ்சா உழைப்பாலும் வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினரான மாற்றுக் கட்சியை சேர்ந்த நன்றிகெட்ட பேர்வழிகள் சிலர் தி.மு.க., நடத்திய கோமாளி மாதிரி சட்டமன்றத்துக்கு சென்று பஃபூன் வேஷம் கட்டியிருக்கிறார்கள். என்றும், லொடுக்கு பாண்டிகளுக்கு சுளுக்கு காத்திருக்கு.. என்றும் கடுமையாக தாக்கி எழுதப்பட்டுள்ளது.
இந்த கட்டுரை கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோரது ஆதரவாளர்களை கொதிப்படையச் செய்துள்ளது.