கோவை: ரஜினி மக்கள் மன்றத்தின் இளைஞர் அணியின் அறிமுக கூட்டம் கோவையில் இன்று நடைபெற்றது.
கோவை: ரஜினி மக்கள் மன்றத்தின் இளைஞர் அணியின் அறிமுக கூட்டம் கோவையில் இன்று நடைபெற்றது.

கோவையில் கடந்த வாரம் அனைத்து நகர ஒன்றிய ரஜினி மக்கள் மன்ற இளைஞரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் நடைபெற்றது. இந்த நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கான அறிமுகக் கூட்டம் இன்று டாடாபத் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில், இந்த மாத இறுதிக்குள் 5 ஆயிரம் சிறப்பான இளைஞர்களை மன்றத்தில் இணைப்பதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.
இந்த கூட்டம் குறித்து மாவட்ட இளைஞரணி செயலாளர் வினோத் குமார் கூறுகையில், "வேகமாக செயல்பட்டு மன்றத்தின் கொள்கைகளை மக்களிடத்தில் சேர்க்கும் அடிப்படையில் செயல்படுவோம். நாங்கள் வெறும் ரசிகர் கூட்டம் அல்ல சமூக மாற்றத்தை விரும்பும் கூட்டம்." என்றார்.

Video: Laxman