கோவை: கோவையில் வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் நடந்து சென்றவர்களை போக்குவரத்து காவலர் ஒருவர் குச்சியால் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை: கோவையில் வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் நடந்து சென்றவர்களை போக்குவரத்து காவலர் ஒருவர் குச்சியால் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செல்வபுரம் காவல் நிலையத்தி்ல் போக்குவரத்து தலைமை காவலராக பணிபுரிபவர் பாஸ்கர். நேற்று இரவு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளை குச்சியால் தாக்கினார். இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களை மட்டுமல்லாது. நான்கு சக்கர வாகனத்தில் உள்ளே அமர்ந்து செல்பவர்களையும், தான் வைத்துள்ள குச்சியால் அடித்து வந்துள்ளார். மேலும், நடந்து செல்லும் பொதுமக்களையும் தாக்கியுள்ளார்.

அவர் குடிபோதையில் இருந்ததாகக் கூறி பொதுமக்கள் பலரும் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
பொதுமக்கள் அளித்த புகாரையடுத்து, போக்குவரத்து காவலர் பணியின் போது குடிபோதையில் இருந்தாரா? என்பது குறித்து காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். போக்குவரத்தை சரி செய்ய வேண்டிய காவலரின் தவறான நடவடிக்கையால் செல்வபுரம் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Video: Laxman
செல்வபுரம் காவல் நிலையத்தி்ல் போக்குவரத்து தலைமை காவலராக பணிபுரிபவர் பாஸ்கர். நேற்று இரவு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளை குச்சியால் தாக்கினார். இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களை மட்டுமல்லாது. நான்கு சக்கர வாகனத்தில் உள்ளே அமர்ந்து செல்பவர்களையும், தான் வைத்துள்ள குச்சியால் அடித்து வந்துள்ளார். மேலும், நடந்து செல்லும் பொதுமக்களையும் தாக்கியுள்ளார்.

அவர் குடிபோதையில் இருந்ததாகக் கூறி பொதுமக்கள் பலரும் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
பொதுமக்கள் அளித்த புகாரையடுத்து, போக்குவரத்து காவலர் பணியின் போது குடிபோதையில் இருந்தாரா? என்பது குறித்து காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். போக்குவரத்தை சரி செய்ய வேண்டிய காவலரின் தவறான நடவடிக்கையால் செல்வபுரம் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Video: Laxman