திருப்பூர்: திருப்பூர் அருகே மாநகர ஆயுதப்படை காவலரின் உடல் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூர் அருகே மாநகர ஆயுதப்படை காவலரின் உடல் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாநகர ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணி புரிந்து வருபவர் மோகன். இவர், தேனி மாவட்டம் போடி நாயக்கனூரை சேர்ந்தவர். இவருக்கு ரமா என்ற மனைவியும், ஆறுமாதக் கைக்குழந்தையும் உள்ளது. இந்நிலையில், நேற்று மாலையிலிருந்து மோகன் அலுவலகத்தில் இல்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை ரயில்வே போலீசாருக்கு காலேஜ் ரோடு பகுதியிலுள்ள தண்டவாளத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். அதில், இறந்தது மோகன் என்பது தெரியவந்தது. பின்னர், சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், அதனை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தண்டவாளத்தை கடக்கும் பொழுது ரயிலில் அடிபட்டு இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். பணிச்சுமையின் காரணமாகவோ அல்லது சொந்த பிரச்சனையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்கிற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் மாநகர ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணி புரிந்து வருபவர் மோகன். இவர், தேனி மாவட்டம் போடி நாயக்கனூரை சேர்ந்தவர். இவருக்கு ரமா என்ற மனைவியும், ஆறுமாதக் கைக்குழந்தையும் உள்ளது. இந்நிலையில், நேற்று மாலையிலிருந்து மோகன் அலுவலகத்தில் இல்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை ரயில்வே போலீசாருக்கு காலேஜ் ரோடு பகுதியிலுள்ள தண்டவாளத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். அதில், இறந்தது மோகன் என்பது தெரியவந்தது. பின்னர், சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், அதனை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தண்டவாளத்தை கடக்கும் பொழுது ரயிலில் அடிபட்டு இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். பணிச்சுமையின் காரணமாகவோ அல்லது சொந்த பிரச்சனையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்கிற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.