திருப்பூரில் ஆயுதப்படை காவலரின் உடல் ரயில் தண்டவாளத்தில் கண்டெடுப்பு: தற்கொலையா என போலீசார் விசாரணை

திருப்பூர்: திருப்பூர் அருகே மாநகர ஆயுதப்படை காவலரின் உடல் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே மாநகர ஆயுதப்படை காவலரின் உடல் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாநகர ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணி புரிந்து வருபவர் மோகன். இவர், தேனி மாவட்டம் போடி நாயக்கனூரை சேர்ந்தவர். இவருக்கு ரமா என்ற மனைவியும், ஆறுமாதக் கைக்குழந்தையும் உள்ளது. இந்நிலையில், நேற்று மாலையிலிருந்து மோகன் அலுவலகத்தில் இல்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று காலை ரயில்வே போலீசாருக்கு காலேஜ் ரோடு பகுதியிலுள்ள தண்டவாளத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். அதில், இறந்தது மோகன் என்பது தெரியவந்தது. பின்னர், சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், அதனை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தண்டவாளத்தை கடக்கும் பொழுது ரயிலில் அடிபட்டு இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். பணிச்சுமையின் காரணமாகவோ அல்லது சொந்த பிரச்சனையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்கிற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...