சீரான குடிநீர் விநியோகம் கோரி மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் பொதுமக்கள் மறியல்

மேட்டுப்பாளையம்: கோவை அருகே சீரான குடிநீர் விநியோகம் கோரி மேட்டுப்பாளையம் - அன்னூர் நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம்: கோவை அருகே சீரான குடிநீர் விநியோகம் கோரி மேட்டுப்பாளையம் - அன்னூர் நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ராமம்பாளையம், ஜெ.ஜெ நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்களுக்கு கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை. இது குறித்து கிராம மக்கள் ஜடையம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும், குடியிருப்புகளுக்கு தண்ணீர் வழங்காமல் அருகில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்கி வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.



இந்த நிலையில், சீரான குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி திடீரென அன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் காரணமாக வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 



மேலும், 2 மணி நேரத்தில் தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியல் போராட்டம் காரணமாக அன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.​

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...