மேட்டுப்பாளையம்: கோவை அருகே சீரான குடிநீர் விநியோகம் கோரி மேட்டுப்பாளையம் - அன்னூர் நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம்: கோவை அருகே சீரான குடிநீர் விநியோகம் கோரி மேட்டுப்பாளையம் - அன்னூர் நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ராமம்பாளையம், ஜெ.ஜெ நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்களுக்கு கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை. இது குறித்து கிராம மக்கள் ஜடையம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும், குடியிருப்புகளுக்கு தண்ணீர் வழங்காமல் அருகில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்கி வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில், சீரான குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி திடீரென அன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் காரணமாக வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும், 2 மணி நேரத்தில் தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியல் போராட்டம் காரணமாக அன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ராமம்பாளையம், ஜெ.ஜெ நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்களுக்கு கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை. இது குறித்து கிராம மக்கள் ஜடையம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும், குடியிருப்புகளுக்கு தண்ணீர் வழங்காமல் அருகில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்கி வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில், சீரான குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி திடீரென அன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் காரணமாக வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும், 2 மணி நேரத்தில் தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியல் போராட்டம் காரணமாக அன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.