ஒப்பந்ததாரர்களின் அலட்சியத்தால் ஆனைகட்டியில் போடப்படும் தரமற்ற தார்சாலைகள்

கோவை: தமிழக எல்லைப் பகுதியான ஆனைகட்டி மலைகிராமத்தை இணைக்கும் சாலைகள், ஒப்பந்ததாரர்களின் அலட்சியத்தால் தரமற்றுப் போடப்பட்டு வருவதாக மலைவாழ் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


கோவை: தமிழக எல்லைப் பகுதியான ஆனைகட்டி மலைகிராமத்தை இணைக்கும் சாலைகள், ஒப்பந்ததாரர்களின் அலட்சியத்தால் தரமற்றுப் போடப்பட்டு வருவதாக மலைவாழ் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

மேற்குமலைத்தொடர்ச்சியில் இருக்கும் ஆனைகட்டி மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இங்கு, அடிக்கடி மழை பெய்வதால், அரசால் போடப்படும் தார் சாலைகள் சீக்கிரம் பெயர்ந்து குண்டும், குழியுமாகி மாறி விடுகிறது. இந்நிலையில், ஆனைகட்டி ஆலமரமேடு பகுதியில் உள்ள கொண்டனூர், கொண்டனூர் புதூர், பணப்பள்ளி ஆகிய கிராமங்களில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 

இதனிடையே, இந்த நான்கு மலைவாழ் கிராமங்களையும் வகையில் சுமார் 5 கி.மீ. தொலைவிற்கு தார் சாலைகள் போட ரூ. 60 லட்சம் மதிப்பில் ஒப்பந்தம் விடப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றது. ஒப்பந்தம் எடுத்தவர் சாலை அமைக்க முதலில் செம்மண், கருங்கல் பரப்பி, மீண்டும் செம்மண் போட்டு பின்பு ஜல்லி கற்களை பரப்பி அதன் மீது தார் ஊற்றி குவாரி மண் போடுவது வழக்கம். 

இதனைவிடுத்து, சாலை அமைப்பதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றவர்களோ, நேரடியாக ஜல்லி கற்களை போட்டு தார் ஊற்றுவதால், சில மாதங்கள் கூட சாலை இருக்காத சூழல் ஏற்படும். மேலும், இப்பகுதியில் செங்கல் சூளைகள் உள்ளதால், தரமற்று போடப்படும் தார் சாலைகள் சீக்கிரம் பெயர்ந்து விடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.



எனவே, வட்டார வளர்ச்சி அதிகாரிகளும், அத்தொகுதி எம்.எல்.ஏ.வும் உடனடியாக நடவடிக்கை எடுக்க நான்கு கிராம மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்தனர். 

இப்பகுதியில், இலவச கழிப்பிடம் கட்டித்தராமல் ஏமாற்றியதாக ஒப்பந்ததாரர் மீது புகார் எழுந்ததையடுத்து கட்டிக்கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல, தரமற்ற சாலைகள் அமைக்கும்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.



Video: M.Balaji

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...