மேட்டுப்பாளையத்தில் வங்கியில் கொள்ளை முயற்சி: எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்

கோவை: மேட்டுப்பாளையம் அருகே மர்ம நபர்கள் சிலர் எஸ்.பி.ஜ வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: மேட்டுப்பாளையம் அருகே மர்ம நபர்கள் சிலர் எஸ்.பி.ஜ வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த கெம்மநாயக்கன்பாளையத்தில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் பல்வேறு மில் அதிபர்கள் வங்கி கணக்கு வைத்துள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணி அளவில் வங்கியின் அபாய சங்கு ஒலித்தது.



இதனையடுத்து, அருகில் இருந்த பொதுமக்கள் அங்கு செல்கையில் வங்கியில் இருந்து மர்ம நபர்கள் ஓடியுள்ளதை பார்த்தனர். இதனையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து, அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் வங்கியின் முன்பக்க ஷட்டரை உடைத்த கொள்ளையர்கள் உள்ளே புகுந்து லாக்கரை உடைக்க முயன்றதும், அப்போது அபாய ஒலி ஒலித்ததால் அவர்கள் தப்பி ஓடியதும் தெரிய வந்தது. 



மேலும், வங்கியில் பதிவான ரகசிய காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், கொள்ளையர்கள் ஓடும் காட்சி பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கி மற்றும் ஏ.டி.எம் மையம் அமைந்துள்ள போதும் காவலாளி இல்லாததால் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவித்தனர். 

மேலும், கொள்ளைச் சம்பவங்களை தடுக்கும் வகையில் இரவு நேரத்தில் போலீசார் அதிகளவில் ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். 

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...