வால்பாறையில் சிறுத்தை தாக்கியதில் பெண் தொழிலாளி படுகாயம்

வால்பாறை: வால்பாறை பகுதியில் சிறுத்தை தாக்கி பெண் தொழிலாளி படுகாயமடைந்தார்.

வால்பாறை: வால்பாறை பகுதியில் சிறுத்தை தாக்கி பெண் தொழிலாளி படுகாயமடைந்தார். 

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது சின்கோனா தேயிலை தோட்டம். தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்திற்கு சொந்தமான இந்த தோட்டத்தில் சந்திரமதி (45) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு 7 மணியளவில் வீட்டின் பின்புறம் சென்றுள்ளார். 

அப்போது அங்கிருந்த புதரில் பதுங்கி இருந்த சிறுத்தைப் புலி திடீரென பாய்ந்து அவரை பின்பக்கமாக தாக்கியது. இதனால் அவர் சத்தம் போட்டபடி கீழே விழுந்தார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த மக்கள் ஓடி வரவே சிறுத்தை அவரை விட்டு விட்டு ஓடியது. 

பின்னர், சந்திரமதியை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேற்கொண்டு தீவிர சிகிச்சைக்காக அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.



கடந்த வாரம் அதே பகுதியில் சிறுத்தைப் புலி தாக்கியதில் 11 வயது மாணவி படுகாயம் அடைந்தார். இந்த சூழலில் மீண்டும் அதே போன்ற சம்பவம் நடைபெற்ற காரணத்தால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும், கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்கக் கோரிக்கை வைத்துள்ளனர்.



Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...