கோவை: மேட்டுப்பாளையம் அருகே ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி ஏ.டி.எம் மையத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
கோவை: மேட்டுப்பாளையம் அருகே ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி ஏ.டி.எம் மையத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த அன்னூரில் சக்தி சாலையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. பிரதான சாலையின் முன்பு உள்ள இந்த வங்கியின் கட்டிடத்தின் கீழ் பகுதியில் ஏ.டி.எம் மெசின் அமைந்துள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு ஏ.டி.எம் மெசினில் இருந்து திடீரென கரும்புகை வருவதைக் கண்ட ஏ.டி.எம் காவலாளி உடனடியாக சுதாரித்து அன்னூர் தீயணைப்பு நிலையத்திற்கும் காவல் துறைக்கும் தகவல் அளித்தார். தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு மெசினின் பின் பகுதியில் பற்றிய தீயை அனைத்தனர்.

இதனால் ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் ரொக்க பணம் சேதமாவது தடுக்கப்பட்டது. தொடர்ந்து காவல்துறை சார்பில் நடைபெற்ற விசாரணையில் மின் அழுத்தம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இருப்பினும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த அன்னூரில் சக்தி சாலையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. பிரதான சாலையின் முன்பு உள்ள இந்த வங்கியின் கட்டிடத்தின் கீழ் பகுதியில் ஏ.டி.எம் மெசின் அமைந்துள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு ஏ.டி.எம் மெசினில் இருந்து திடீரென கரும்புகை வருவதைக் கண்ட ஏ.டி.எம் காவலாளி உடனடியாக சுதாரித்து அன்னூர் தீயணைப்பு நிலையத்திற்கும் காவல் துறைக்கும் தகவல் அளித்தார். தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு மெசினின் பின் பகுதியில் பற்றிய தீயை அனைத்தனர்.

இதனால் ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் ரொக்க பணம் சேதமாவது தடுக்கப்பட்டது. தொடர்ந்து காவல்துறை சார்பில் நடைபெற்ற விசாரணையில் மின் அழுத்தம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இருப்பினும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.