ஊட்டி - கேட்டி இடையே நாளை முதல் வார இறுதிச் சுற்றுலா ரயில் இயக்கம்

நீலகிரி: ஊட்டி - கேட்டி இடையே இயக்கப்படும் வார இறுதி வட்டச் சுற்றுலா மலை ரயில் நாளை முதல் இயக்கப்படுகிறது.


நீலகிரி: ஊட்டி - கேட்டி இடையே இயக்கப்படும் வார இறுதி வட்டச் சுற்றுலா மலை ரயில் நாளை முதல் இயக்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டம் உதகைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் உ. சுப்பாராவ் அறிவித்தபடி, வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நீலகிரி மலை ரயில், ஊட்டி மற்றும் கேட்டி இடையே இயக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, நாளை (ஜுன் 02) முதல் வார இறுதி வட்டச் சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலில் ஒரு முதல்வகுப்பு, இரண்டாம் வகுப்பு இணைந்த ரயில்பெட்டியும் (16 முதல்வகுப்பு + 36 இரண்டாம் வகுப்பு, மொத்தம் 52 இருக்கைகள்), ஒரு இரண்டாம் வகுப்பு ரயில்பெட்டியும் (30 இருக்கைகள்) மொத்தம் 82 இருக்கைகள் இருக்கும்.

உதகையில் இருந்து மதியம் 2.30 மணிக்குப் புறப்பட்டு, கேட்டிக்கு 3.00 மணிக்கும், கேட்டியில் இருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு 4.00 மணிக்கு உதகைக்கும் வந்தடையும்.

இந்த ரயிலின் கட்டணங்கள் முதல் வகுப்பு ரூ. 400. இரண்டாம் வகுப்பு ரூ. 200. இக்கட்டணத்தில் ஒரு சமோசா, ஒரு கப் வெஜிடபிள் சூப், ரயில்வே சின்னம் பொறித்த ஒரு தொப்பி, நீலகிரி மலைரயில் பற்றிய ஒரு சிறு கையேடு மற்றும் ஒரு பேப்பர் பை ஆகியவை வழங்கப்படும். சுற்றுலாப் பயணிகள் இந்த வட்டச் சுற்றுலா ரயில் பயணத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதனிடையே, கோவை - பெங்களூரூ இடையே இரண்டு அடுக்கு உதய் எக்ஸ்பிரஸ் ரயில்சேவை வரும் 10-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதையொட்டி, ரயில்வே பிராந்திய ரயில்வே மேலாளர் சுப்பாராவ் கோவை ரயில்நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.



Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...