திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 40 அடி ஆழம் விவசாய கிணற்றில் விழுந்த கறவை மாட்டினை 2 மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 40 அடி ஆழம் விவசாய கிணற்றில் விழுந்த கறவை மாட்டினை 2 மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.
பல்லடத்தை அடுத்த வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி பாலசுப்ரமணி. இவரது தோட்டத்தில் கறவை மாடுகள் மற்றும் ஆடுகளை வளர்த்து வருகிறார். இன்று காலை வழக்கம்போல, கால்நடைகளை தனது விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அதில், ஒரு கறவை மாடு விவசாய நிலத்தின் அருகிலிருந்த 40 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள், உடனடியாக உரிமையாளர் பாலசுப்ரமணித்திற்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

அதன்படி, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக கறவை மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், 40 அடி ஆழம் என்பதால், மிரண்டிருந்த மாடு மிகவும் முரண்டு பிடித்தது. இதனால், மீட்டை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து, ஜே.சி.பி., இயந்திரத்தை வரவழைத்த தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி மாட்டினை உயிருடன் மீட்டனர்.

பல்லடத்தை அடுத்த வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி பாலசுப்ரமணி. இவரது தோட்டத்தில் கறவை மாடுகள் மற்றும் ஆடுகளை வளர்த்து வருகிறார். இன்று காலை வழக்கம்போல, கால்நடைகளை தனது விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அதில், ஒரு கறவை மாடு விவசாய நிலத்தின் அருகிலிருந்த 40 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள், உடனடியாக உரிமையாளர் பாலசுப்ரமணித்திற்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

அதன்படி, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக கறவை மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், 40 அடி ஆழம் என்பதால், மிரண்டிருந்த மாடு மிகவும் முரண்டு பிடித்தது. இதனால், மீட்டை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து, ஜே.சி.பி., இயந்திரத்தை வரவழைத்த தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி மாட்டினை உயிருடன் மீட்டனர்.
