திருப்பூர்: திருப்பூர் அருகே பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஒப்பந்த ஊழியரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூர் அருகே பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஒப்பந்த ஊழியரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடுமலை அருகே சாலைப்புதூர் பகுதியில் புதிய மின் கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த ஊழியர் மாசனி (42) மின்சாரம் தாக்கி நேற்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை பார்க்க மின்வாரிய உயர் அதிகாரிகள் வராததைக் கண்டித்தும், அவரது குடும்பத்திற்கு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்கக் கோரியும் உடுமலை அரசு மருத்துவமனையில் மாசானியின் உடலை வாங்க மறுத்து ஒப்பந்த ஊழியர்கள், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து ஒப்பந்த தொழிலாளர் நாகராஜ் கூறுகையில், "அதிகாரிகளின் அலட்சியத்தால் மின்சாரம் சரியாக நிறுத்தப்படாமல், எங்களுடன் பணியாற்றிய மாசனி என்பவர் பலியானார். அவரது உடலைப் பார்க்க கோவை மண்டத்திலிருந்து மின்வாரிய உயர் அதிகாரி ஒருவராவது வரவேண்டும். மாசனியின் குடும்பத்திற்கு நிவாரணம் மற்றும் வேலைவாய்ப்பு அளிக்க உறுதி கொடுக்க வேண்டும். இச்சம்பவத்திற்கு காரணமான அதிகாரியை போலீசார் கைது செய்ய வேண்டும். இல்லையெனில், உடலை வாங்க மறுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்," என்றார்.

மாசனியின் உடல் உடுமலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட நிலையில், ஐநூறுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் உடுமலை அரசு மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது.

உடுமலை அருகே சாலைப்புதூர் பகுதியில் புதிய மின் கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த ஊழியர் மாசனி (42) மின்சாரம் தாக்கி நேற்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை பார்க்க மின்வாரிய உயர் அதிகாரிகள் வராததைக் கண்டித்தும், அவரது குடும்பத்திற்கு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்கக் கோரியும் உடுமலை அரசு மருத்துவமனையில் மாசானியின் உடலை வாங்க மறுத்து ஒப்பந்த ஊழியர்கள், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து ஒப்பந்த தொழிலாளர் நாகராஜ் கூறுகையில், "அதிகாரிகளின் அலட்சியத்தால் மின்சாரம் சரியாக நிறுத்தப்படாமல், எங்களுடன் பணியாற்றிய மாசனி என்பவர் பலியானார். அவரது உடலைப் பார்க்க கோவை மண்டத்திலிருந்து மின்வாரிய உயர் அதிகாரி ஒருவராவது வரவேண்டும். மாசனியின் குடும்பத்திற்கு நிவாரணம் மற்றும் வேலைவாய்ப்பு அளிக்க உறுதி கொடுக்க வேண்டும். இச்சம்பவத்திற்கு காரணமான அதிகாரியை போலீசார் கைது செய்ய வேண்டும். இல்லையெனில், உடலை வாங்க மறுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்," என்றார்.

மாசனியின் உடல் உடுமலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட நிலையில், ஐநூறுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் உடுமலை அரசு மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது.