பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்த பா.ஜ.க., பிரமுகரும், நடிகருமான எஸ்.வி., சேகரின் முன்ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்த பா.ஜ.க., பிரமுகரும், நடிகருமான எஸ்.வி., சேகரின் முன்ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து மிகவும் தரக்குறைவான கருத்தை நடிகர் எஸ்.வி.,சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பத்திரிகையாளர்கள் நல சங்கம் சார்பில் புகாரளிக்கப்பட்டது. அதனடிப்படையில், அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி எஸ்.வி., சேகர் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, எஸ்.வி.,சேகர் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், எஸ்.வி., சேகரை கைது செய்ய தடையில்லை எனத் தெரிவித்துள்ளனர். மேலும், எஸ்.வி., சேகருக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்த உச்சநீதிமன்றம், விசாரணை நீதிமன்றமான எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக எஸ்.வி., சேகருக்கு உத்தரவிட்டது.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து மிகவும் தரக்குறைவான கருத்தை நடிகர் எஸ்.வி.,சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பத்திரிகையாளர்கள் நல சங்கம் சார்பில் புகாரளிக்கப்பட்டது. அதனடிப்படையில், அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி எஸ்.வி., சேகர் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, எஸ்.வி.,சேகர் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், எஸ்.வி., சேகரை கைது செய்ய தடையில்லை எனத் தெரிவித்துள்ளனர். மேலும், எஸ்.வி., சேகருக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்த உச்சநீதிமன்றம், விசாரணை நீதிமன்றமான எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக எஸ்.வி., சேகருக்கு உத்தரவிட்டது.