5 ஆண்டு சட்டப்படிப்புக்கான விண்ணப்பம் கோவை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள சட்டக் கல்லூரிகளில் இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
5 ஆண்டு சட்டப்படிப்புக்கான விண்ணப்பம் கோவை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள சட்டக் கல்லூரிகளில் இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 11 சட்டக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இவற்றில், ஐந்தாண்டு ஹானர்ஸ் சட்டப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே 28-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், ஐந்தாண்டு ஹானர்ஸ் அல்லாத சட்டப்படிப்புக்கான, விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியது. இன்று முதல் 29-ம் தேதி வரை விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து தரலாம்.
இந்த ஆண்டு முதல் ஆன்லைனிலும் சட்டப் படிப்பு விண்ணப்பப் பதிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் செய்ய விருப்பம் இல்லாதவர்கள், சட்ட கல்லூரிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து தரலாம் என அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 11 சட்டக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இவற்றில், ஐந்தாண்டு ஹானர்ஸ் சட்டப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே 28-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், ஐந்தாண்டு ஹானர்ஸ் அல்லாத சட்டப்படிப்புக்கான, விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியது. இன்று முதல் 29-ம் தேதி வரை விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து தரலாம்.
இந்த ஆண்டு முதல் ஆன்லைனிலும் சட்டப் படிப்பு விண்ணப்பப் பதிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் செய்ய விருப்பம் இல்லாதவர்கள், சட்ட கல்லூரிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து தரலாம் என அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.