சிறுமுகை அருகே புள்ளிமானை வேட்டையாடிய ஆறு பேருக்கு 6 ஆண்டுகள் சிறை

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் புள்ளிமானை வேட்டையாடிய ஆறு பேருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் புள்ளிமானை வேட்டையாடிய ஆறு பேருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட மொக்கைமேடு, காப்புக்காடு பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு வனத்துறையினர் ரோந்து சென்ற போது, நாட்டுத்துப்பாக்கியுடன் 6 பேர் கொண்ட கும்பல் சட்டவிரோதமாக நடமாடிக் கொண்டிருந்தது. அவர்களைச் சுற்றி வளைத்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து நாட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்தி புள்ளிமானை வேட்டையாடியது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, மொக்கைமேடு பகுதியைச் சேர்ந்த சுப்பன், அய்யாவு, முருகேஷ், நாகராஜ், குஞ்சான், ராசுக்குட்டி ஆகியோர் மீது வனச்சட்டத்தின் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 6 பேருக்கும் தலா ஆறு ஆண்டுகள் சிறைதண்டனை அளித்து மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டுள்ளார்.

வனக்குற்றங்களுக்கு இங்கு இதுவரை அபராதம் மட்டும் விதிக்கப்பட்டு வந்த நிலையில், நீதிபதியின் இந்தத் தீர்ப்பு வனக்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஒரு எச்சரிக்கை என வனத்துறையினரும், சமூக ஆர்வலர்களுக்கும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...