கோவை: கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.140 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழில்நுட்பக் கட்டிடங்கள் கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கோவை: கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.140 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழில்நுட்பக் கட்டிடங்கள் கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் விதி எண். 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாசித்த அறிவிப்பில் :- அளப்பரிய வளர்ச்சியினை அடைந்து இருக்கின்ற தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் பொதுமக்களுக்கான சேவைகளை விரைந்து வழங்கி வருகின்ற ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் அரசு, அதனை முன்னெடுத்து செல்ல பல நடவடிக்கைகளை முனைப்புடன் எடுத்து வருகிறது.
அந்த வகையில், நடப்பாண்டில் பின்வரும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிக்கின்றேன். தொழில் முனைவோர்களுக்கு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் அதனைச் சார்ந்த வணிகத்தை தொடங்க ஏதுவாக, கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில் உள்ள எல்கோசெஸ்ஸில் 2 லட்சத்து 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ரூ. 100 கோடி மதிப்பீட்டிலும், திருச்சியில் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ. 40 கோடி மதிப்பீட்டிலும் இரண்டு தகவல் தொழில்நுட்பக் கட்டடங்கள் கட்டப்படும்.
தமிழ்நாடு அரசின் தகவல் தொழில் நுட்பவியல் உட்கட்டமைப்புகளான டி.என்.எஸ்.டபுள்யூ.ஏ.என்., டி.என்.எஸ்.டி.சி., மற்றும் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் மின் ஆளுமை சேவைகளை இணைய அச்சுறுத்தல்கள் மற்றும் தடைகளிலிருந்து கண்காணித்து, தடங்கலற்ற மற்றும் பாதுகாப்பான இணைய சேவையினை வழங்கும் பொருட்டு “தமிழ்நாட்டிற்கான இணையப் பாதுகாப்பு கட்டமைப்பு திட்டம்” 21 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் எல்காட் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும். இதன்மூலம், தடையற்ற இணையவழி சேவைகள் மற்றும் அரசு துறைகளின் தரவுகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அதன் சந்தாதாரர்களுக்கு தற்போது தரமான வரையறையில் டிஜிட்டல் கேபிள் டிவி சேவை வழங்கி வருகிறது. அதனை மேம்படுத்தும் விதமாக, உயர் வரையறை தரத்தில் மிக துல்லியமான சேவையை “HD செட்டாப் பாக்ஸ்” வாயிலாக வழங்கப்படும், இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் விதி எண். 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாசித்த அறிவிப்பில் :- அளப்பரிய வளர்ச்சியினை அடைந்து இருக்கின்ற தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் பொதுமக்களுக்கான சேவைகளை விரைந்து வழங்கி வருகின்ற ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் அரசு, அதனை முன்னெடுத்து செல்ல பல நடவடிக்கைகளை முனைப்புடன் எடுத்து வருகிறது.
அந்த வகையில், நடப்பாண்டில் பின்வரும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிக்கின்றேன். தொழில் முனைவோர்களுக்கு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் அதனைச் சார்ந்த வணிகத்தை தொடங்க ஏதுவாக, கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில் உள்ள எல்கோசெஸ்ஸில் 2 லட்சத்து 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ரூ. 100 கோடி மதிப்பீட்டிலும், திருச்சியில் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ. 40 கோடி மதிப்பீட்டிலும் இரண்டு தகவல் தொழில்நுட்பக் கட்டடங்கள் கட்டப்படும்.
தமிழ்நாடு அரசின் தகவல் தொழில் நுட்பவியல் உட்கட்டமைப்புகளான டி.என்.எஸ்.டபுள்யூ.ஏ.என்., டி.என்.எஸ்.டி.சி., மற்றும் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் மின் ஆளுமை சேவைகளை இணைய அச்சுறுத்தல்கள் மற்றும் தடைகளிலிருந்து கண்காணித்து, தடங்கலற்ற மற்றும் பாதுகாப்பான இணைய சேவையினை வழங்கும் பொருட்டு “தமிழ்நாட்டிற்கான இணையப் பாதுகாப்பு கட்டமைப்பு திட்டம்” 21 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் எல்காட் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும். இதன்மூலம், தடையற்ற இணையவழி சேவைகள் மற்றும் அரசு துறைகளின் தரவுகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அதன் சந்தாதாரர்களுக்கு தற்போது தரமான வரையறையில் டிஜிட்டல் கேபிள் டிவி சேவை வழங்கி வருகிறது. அதனை மேம்படுத்தும் விதமாக, உயர் வரையறை தரத்தில் மிக துல்லியமான சேவையை “HD செட்டாப் பாக்ஸ்” வாயிலாக வழங்கப்படும், இவ்வாறு தெரிவித்துள்ளார்.