உதகை: உதகை நகராட்சி குடியிருப்புகளில் சட்டத்திற்கு புறம்பாக குடியிருப்பவர்களை வெளியேற்றாமல் இருக்கும் நகராட்சி ஆணையாளர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக தமிழ்நாடு ஊழல் ஒழிப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.
உதகை: உதகை நகராட்சி குடியிருப்புகளில் சட்டத்திற்கு புறம்பாக குடியிருப்பவர்களை வெளியேற்றாமல் இருக்கும் நகராட்சி ஆணையாளர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக தமிழ்நாடு ஊழல் ஒழிப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.
உதகையில் தமிழ்நாடு ஊழல் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில், அந்த இயக்கத்தின் சட்ட ஆலோசகர் முரசொலி மாறன் பேசியதாவது :- உதகை நகராட்சியில் துப்புரவு பணியாளர்களாகப் பணியாற்றியவர்களுக்கு நகராட்சி குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, ஓய்வு பெற்றுள்ள துப்புரவு பணியாளர்கள் நகராட்சி குடியிருப்புகளில் சட்டத்திற்கு புறம்பாக குடியிருந்து வருகின்றனர்.

இவ்வாறு அங்கீகாரமற்றவர்களை வெளியேற்றாமல், உயர்நீதிமன்ற ஆணையை அவமதித்து மற்றும் வாடகையை அரசு ஆணை எண் 454 நாள் : 08.12.2011-ன்படி உயர்த்தாமல் அரசிற்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், உதகை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதி பெறாமல் விதிமுறைகளை மீறி கட்டும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்காத உதகை நகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி வருவாய் அலுவர்கள் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம், இவ்வாறு கூறினார்.
உதகையில் தமிழ்நாடு ஊழல் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில், அந்த இயக்கத்தின் சட்ட ஆலோசகர் முரசொலி மாறன் பேசியதாவது :- உதகை நகராட்சியில் துப்புரவு பணியாளர்களாகப் பணியாற்றியவர்களுக்கு நகராட்சி குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, ஓய்வு பெற்றுள்ள துப்புரவு பணியாளர்கள் நகராட்சி குடியிருப்புகளில் சட்டத்திற்கு புறம்பாக குடியிருந்து வருகின்றனர்.

இவ்வாறு அங்கீகாரமற்றவர்களை வெளியேற்றாமல், உயர்நீதிமன்ற ஆணையை அவமதித்து மற்றும் வாடகையை அரசு ஆணை எண் 454 நாள் : 08.12.2011-ன்படி உயர்த்தாமல் அரசிற்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், உதகை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதி பெறாமல் விதிமுறைகளை மீறி கட்டும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்காத உதகை நகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி வருவாய் அலுவர்கள் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம், இவ்வாறு கூறினார்.