சென்னை: சென்னையில் செய்தியாளர்களிடம் ஆவேசமாகப் பேசியதற்கு நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்தார்.
சென்னை: சென்னையில் செய்தியாளர்களிடம் ஆவேசமாகப் பேசியதற்கு நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்தார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துவிட்டு, சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் ஒருமையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ரஜினிக்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கடும் கண்டம் தெரிவித்தது. மேலும், 3 நாட்களுக்குள் வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் கெடு விதித்திருந்தது.

இந்த நிலையில், பத்திரிகையாளர்களிடம் ஆவேசமாக நடந்து கொண்ட முறைக்கு ரஜினி வருத்தம் தெரிவித்தார். இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது :- விமானநிலையத்தில் நேற்று அளித்த பேட்டியின் போது நான் மிரட்டல் தொனியில், ஒருமையில் பேசியதாக சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை. அப்படி எந்தப் பத்திரிக்கை அன்பர்களின் மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன், இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துவிட்டு, சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் ஒருமையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ரஜினிக்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கடும் கண்டம் தெரிவித்தது. மேலும், 3 நாட்களுக்குள் வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் கெடு விதித்திருந்தது.

இந்த நிலையில், பத்திரிகையாளர்களிடம் ஆவேசமாக நடந்து கொண்ட முறைக்கு ரஜினி வருத்தம் தெரிவித்தார். இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது :- விமானநிலையத்தில் நேற்று அளித்த பேட்டியின் போது நான் மிரட்டல் தொனியில், ஒருமையில் பேசியதாக சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை. அப்படி எந்தப் பத்திரிக்கை அன்பர்களின் மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன், இவ்வாறு தெரிவித்துள்ளார்.