திருச்சி: திருச்சியில் உள்ள மாரியம்மன் திருக்கோவிலின் யானை தாக்கியதில் உயிரிழந்த கஜேந்திரனின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடாக வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி: திருச்சியில் உள்ள மாரியம்மன் திருக்கோவிலின் யானை தாக்கியதில் உயிரிழந்த கஜேந்திரனின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடாக வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் :- திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் மசினி என்ற யானை தாக்கியதில், மாகாளிகுடி கிராமத்தைச் சேர்ந்த பாகன் கஜேந்திரன் என்பவர் கடந்த 25-ம் தேதி உயிரிழந்தார். இந்த செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். திருக்கோவில் யானை தாக்கியதில் உயிரிழந்த யானைப்பாகனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த கஜேந்திரனின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் திருக்கோயில் நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன், இவ்வாறு அதில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் :- திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் மசினி என்ற யானை தாக்கியதில், மாகாளிகுடி கிராமத்தைச் சேர்ந்த பாகன் கஜேந்திரன் என்பவர் கடந்த 25-ம் தேதி உயிரிழந்தார். இந்த செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். திருக்கோவில் யானை தாக்கியதில் உயிரிழந்த யானைப்பாகனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த கஜேந்திரனின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் திருக்கோயில் நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன், இவ்வாறு அதில், தெரிவிக்கப்பட்டுள்ளது.