கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சாலைப்புதூர் பகுதியில் புதிய மின் கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர் மாசனி (42) மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சாலைப்புதூர் பகுதியில் புதிய மின் கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர் மாசனி (42) மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து ஒப்பந்த தொழிலாளர் ஒருவர் கூறுகையில், "இன்று உடுமலை அருகே சாலைபுதூர் பகுதியில் காற்றாலைக்கு மின்சார இனைப்பு ஏற்படுத்த புதிய மின் கம்பம் நடும் பணி நடைபெற்றது. அப்போது அதிகாரிகளின் அலட்சியத்தால் மின்சாரம் சரியாக நிறுத்தப்படாமல் எங்களுடன் பணியாற்றிய மாசனி என்பவர் பலியானர். மற்றோரு நபர் லேசான காயத்துடன் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
ஒப்பந்த ஊழியர்களே இல்லை என கூறும் மின்வாரியம் தற்போது இந்த இறப்புக்கு என்ன பதில் சொல்லப் போகிறது? இறந்த மாசனி குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்." என்றார்.
உயிரிழந்த மாசனியின் உடல் உடுமலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இது குறித்து ஒப்பந்த தொழிலாளர் ஒருவர் கூறுகையில், "இன்று உடுமலை அருகே சாலைபுதூர் பகுதியில் காற்றாலைக்கு மின்சார இனைப்பு ஏற்படுத்த புதிய மின் கம்பம் நடும் பணி நடைபெற்றது. அப்போது அதிகாரிகளின் அலட்சியத்தால் மின்சாரம் சரியாக நிறுத்தப்படாமல் எங்களுடன் பணியாற்றிய மாசனி என்பவர் பலியானர். மற்றோரு நபர் லேசான காயத்துடன் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
ஒப்பந்த ஊழியர்களே இல்லை என கூறும் மின்வாரியம் தற்போது இந்த இறப்புக்கு என்ன பதில் சொல்லப் போகிறது? இறந்த மாசனி குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்." என்றார்.
உயிரிழந்த மாசனியின் உடல் உடுமலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.