சென்னை: கடந்த 2010-ல், தொழில்துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின் தான் தான், ரூ.1,500 கோடியில் ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு 230 ஏக்கர் நிலம் வழங்கினார் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை: கடந்த 2010-ல், தொழில்துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின் தான் தான், ரூ.1,500 கோடியில் ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு 230 ஏக்கர் நிலம் வழங்கினார் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பேசினார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்ததைத் தான் நாங்கள் சொன்னோம். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்தே அரசாணை வெளியிடப்பட்டது. தனிப்பட்ட ஒரு ஆலையை பற்றி தீர்மானம் நிறைவேற்ற முடியாது.
கடந்த 2010-ல், தொழில்துறை அமைச்சராக ஸ்டாலின் தான் இருந்தபோது தான், ரூ.1500 கோடியில் ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு 230 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. மாதிரி சட்டசபையில் எது வேண்டுமானாலும் பேசி விடலாம் ஆனால். சட்டசபையில் உண்மையே பேச வேண்டும். சட்டசபையில் பேசினால் உண்மை வெளிவந்து விடும் என்ற அச்சம் காரணமாக தி.மு.க., சட்டசபைக்கு வரவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் என்றாலும் ஜெயலலிதா போல் இருக்க வேண்டும். 2006-ல் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்றிய போது தன்னந்தனியாக ஜனநாயக கடமையாற்றியவர் ஜெயலலிதா. 67 துறை அமைச்சர்களின் குறுக்கீடுகளை எதிர்கொண்டு பேசியவர் ஜெயலலிதா. என்று அவர் பேசினார்.