நிலக்கரியில் இயங்கும் ஊட்டி மலை ரயில்: சோதனை ஓட்டம் தொடங்கியது

நீலகிரி: நிலக்கரியில் செயல்படும் பழமை வாய்ந்த ஊட்டி மலை ரயில் இன்ஜின் கடந்த இரண்டு நாட்களாக சோதனை முறையில் இயக்கப்பட்டு வருகிறது.


நீலகிரி: நிலக்கரியில் செயல்படும் பழமை வாய்ந்த ஊட்டி மலை ரயில் இன்ஜின் கடந்த இரண்டு நாட்களாக சோதனை முறையில் இயக்கப்பட்டு வருகிறது.

உலக பாரம்பரிய யுனஸ்கோ அந்தஸ்து பெற்ற ஊட்டி மலை ரயில் பாதை கடந்த 1899-ம் ஆண்டு முதல் சேவையை செய்து வருகிறது.



மேட்டுப்பாளையத்திலிருந்து 46.61 கிலோ மீட்டர் தொலைவில் குன்னுார் வழியாக சுமார் 330 மீட்டர் கடல் மட்டதிலிருந்து உயரம் கொண்டுள்ள ஊட்டிக்கு இன்றும் சோர்வடையாமல் சென்றுகொண்டுள்ள மலை ரயில் சுமார் 208 வளைவுகளையும், 250 சிறு மற்றும் பெரிய பாலங்களையும் கடந்து செல்கிறது.

இடையே மலையிலிருந்து வரும் அருவிகள், வனத்தில் திரியும் வன விலங்குகள், மலை பிரதேசத்திற்கே உரித்தான தேயிலை தோட்டங்கள் இவைகளை ரசிக்க மலை ரயிலில் தான் செல்லவேண்டும். 

நுாற்றாண்டு கடந்து சென்று வரும் பயணிகளை இயற்கையில் வரும் நிலக்கரியை கொதிகலனில் கொதிக்க செய்து உந்து சக்தியால் இயக்கப்பட்ட மலை ரயில் இன்ஜின் காலபோக்கில் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக தற்போது டீசல் மற்றும் பர்ணஸ் ஆயில் கொண்டு இயக்கப்பட்டுவருகிறது. 

சென்ற வாரம் ஊட்டிக்கு வந்த தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.கே.குல்சேர்ஸ்தா மலை ரயில் இனி வரும் காலங்களில் சுற்றுலா பயணிகள் வியக்கும் வகையில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தெறிவித்தார்.

இதில் முக்கியமானதாக ஏற்கனவே சொல்லப்பட்டிருந்த நிலக்கரியால் இயங்கும் நீராவி இன்ஜின் பொறுத்தப்பட்ட பயணிகள் ரயில் மீண்டும் இயக்கபடும் என்று அறிவிக்கப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக, கடந்த 2 நாட்களாக மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலக்கரி இன்ஜின் இயக்க சேதனை நடைபெற்றுவருகிறது. ரயில் என்ஜின் சோதனை இயக்கத்தை சேலம் கோட்ட ஏ.டி.எம்.தீட்சா சவுத்ரி ஆய்வு செய்தார்.



மேலும் அவர் கூறுகையில், "இந்த சோதனை ஓட்டத்தின் ஆய்வரிக்கையை ரயில்வே வாரியத்திற்கு அனுப்புவோம். மேற்கொண்டு அங்கிருந்து பெறப்படும் உத்தரவு அடிப்படையில் உலக பாரம்பரிய யுனிஸ்கோ சான்று பெற்ற நிலக்கரியில் இயங்கும் நீராவி இன்ஜின் பயன்பாட்டிற்கு வரும்" என்றார். 

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...