கோவை: கோவை மாவட்டத்தில் வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கு சேர வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை வனத்துறை இன்று வழங்கியது.
கோவை: கோவை மாவட்டத்தில் வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கு சேர வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை வனத்துறை இன்று வழங்கியது.
மாவட்டத்தில் வேட்டைத் தடுப்பு காவலர்களாக பணியாற்றும் 130 பேருக்கு கடந்த இரு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்திற்கான பணம் சரியான நேரத்திற்கு வராத காரணத்தால் ஊதியம் வழங்குவதில் தாமதமானதாக தெரிகிறது.
இந்த சூழலில் அவர்களின் ஊதிய நிலுவைத் தொகையை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் இன்று வழங்கினார்.
மாவட்டத்தில் வேட்டைத் தடுப்பு காவலர்களாக பணியாற்றும் 130 பேருக்கு கடந்த இரு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்திற்கான பணம் சரியான நேரத்திற்கு வராத காரணத்தால் ஊதியம் வழங்குவதில் தாமதமானதாக தெரிகிறது.
இந்த சூழலில் அவர்களின் ஊதிய நிலுவைத் தொகையை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் இன்று வழங்கினார்.