சென்னை: ஸ்டெர்லைக்கு எதிரான போராட்டத்தில் சமூக விரோதிகள் போலீசாரை தாக்கியதே துப்பாக்கிச் சூடு நடைபெற காரணம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஸ்டெர்லைக்கு எதிரான போராட்டத்தில் சமூக விரோதிகள் போலீசாரை தாக்கியதே துப்பாக்கிச் சூடு நடைபெற காரணம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற வன்முறையில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்களை நடிகர் இன்று நேரில் சந்தித்தார். தொடர்ந்து சென்னை சென்ற அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து போராட்டத்தை சீர்குலைத்தனர். அதே போலத்தான், ஸ்டெர்லைட் போராட்டத்திலும் சமூக விரோதிகள் புகுந்துவிட்டனர். அதனால் தான் வன்முறை வெடித்தது.
முதலில் அவர்கள் தான் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். அது தான் இந்த பிரச்சினைக்கு காரணம். அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால், தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும்." என்றார்.
பாத்தீங்களா?
ரஜினியின் இந்த பேச்சை தொடர்ந்து, செய்தியாளர்கள் "சமூக விரோதிகள் புகுந்துவிட்டத்தை நீங்கள் பார்த்தீர்களா?" என்ற கேள்வியெழுப்பினர். அதற்கு, "எனக்கு தெரியும்" என்று ஆவேசமாக பதிலளித்து சென்றார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற வன்முறையில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்களை நடிகர் இன்று நேரில் சந்தித்தார். தொடர்ந்து சென்னை சென்ற அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து போராட்டத்தை சீர்குலைத்தனர். அதே போலத்தான், ஸ்டெர்லைட் போராட்டத்திலும் சமூக விரோதிகள் புகுந்துவிட்டனர். அதனால் தான் வன்முறை வெடித்தது.
முதலில் அவர்கள் தான் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். அது தான் இந்த பிரச்சினைக்கு காரணம். அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால், தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும்." என்றார்.
பாத்தீங்களா?
ரஜினியின் இந்த பேச்சை தொடர்ந்து, செய்தியாளர்கள் "சமூக விரோதிகள் புகுந்துவிட்டத்தை நீங்கள் பார்த்தீர்களா?" என்ற கேள்வியெழுப்பினர். அதற்கு, "எனக்கு தெரியும்" என்று ஆவேசமாக பதிலளித்து சென்றார்.